search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீக்கடைக்காரர்"

    • டீக்கடைக்காரர் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் கந்துவட்டி கும்பலை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை திருவேகம்புத்தூர் அருகே ஆந்தகுடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் ஒத்தக்கடை பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    தொழில் நிமித்தம் காரணமாக கந்து வட்டி கொடுப்பவர்களிடம் திருநாவுக்கரசு கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பணத்தை சரியாக செலுத்தாத காரணத்தால் அவருக்கு கந்துவட்டிக்காரர்களால் தொல்லை அதி கரித்துள்ளது.சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு திருநாவுக்கரசு வீட்டுக்கு சென்று விட்டார். இதை கண்டுபிடித்து அங்கு சென்ற கந்துவட்டிக்கா ரர்கள் திருநாவு க்கரசுவை மிரட்டியதாக கூறப்ப டுகிறது.

    இந்நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து திருநாவுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றதாகவும், அவர்கள்தான் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று சந்தேகம் இருப்பதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருநாவுக்கரசை வீட்டிலிருந்து அழைத்துச்சென்ற கந்துவட்டி கும்பலை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு பின் திருநாவுக்கரசு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    • கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

    இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட தாரை காமராஜபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் இஸ்மாயில்(வயது61). இவர் நேற்று மாலை பஸ் நிலையம் வந்து விட்டு திருப்பி தனது டீ கடைக்கு செல்வதற்காக தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சென்றார்.

    அப்போது தனியார் கல்லூரி பேருந்து இஸ்மாயில் மீது மோதியது .இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார். இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருத்தாசலத்தில் டீக்கடைக்காரர் திடீரென காணவில்லை.
    • டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை.

    கடலூர்:

    விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் டீக்கடை வைத்து இருப்பவர் காளிதாஸ்(வயது 36). இவர் கடந்த 7-ந் தேதி மதியம் 3 மணி அளவில் டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியவர் வீடு சென்று சேரவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன காளிதாசைத் தேடி வருகின்றனர்.

    ×