search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோளம்"

    • அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது.
    • நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டு வந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும். நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

    சந்தை தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை.

    இன்றைக்கு நம் கண்ணெதிரில் விளையாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டு விட்டன. இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட்டோம்?

    ஆற்றுப்பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்து வந்தார்கள். நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    'பசுமை புரட்சி' என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாக பணப்பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும், மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்புமிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

    குறுகிய காலப்பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்க தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக்கலாசாரம் சிதைந்து போனது.

    இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது. பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்கு பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானிய சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

    அரிசியும், உளுந்தும் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாக சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்கு பிரிஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது.

    இதை பலர் உணர்வதில்லை. சிறுதானியங்கள் நெருப்புச்சத்து கொண்டவை என்பதால், உடலுக்கு பல நன்மை அளிப்பவை.

    • கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள சுப்பிரமணியபுரம், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கொடிகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான மானாவாரி பயிரான மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு சோளம் சாகுபடி செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் கிடைக்காததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூ மகசூல் என சொல்லபடும் கேப்பை சோளம், மொச்சை, தக்காளி வெண்டை, கத்தரி உள்ளிட்ட பயிர்களை பயிரிடாமல் தரிசாகவே போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் பெய்ததால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் செங்கோட்டை தாலுகா இலத்தூர் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், வாழை, நெல் மற்றும் சோளம் போன்ற வற்றை சாகுபடி செய்தனர். ஆனால் பின்னர் பருவமழை கண்ணாமூச்சி காட்டி சென்றது. இதனால் போதிய விளைச்சல் இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் தாங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயி சோழராஜன் கூறும்போது, சோளம் விதைத்து சுமார் 80, 90 நாட்கள் வரை ஏக்கருக்கு சுமார் ரூ.18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் போதிய மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு காரணம் முழுக்க முழுக்க நிலத்தடிநீரை மட்டுமே நம்பி உள்ளதால் கூடுதலாக செலவு செய்தும் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமலும் அதற்கேற்ப விலை இருந்தும் சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஓவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.

    • சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது.
    • 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நத்தக்காடையூர் பி.இ.டி., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், தமிழகத்தில், சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது. 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு உற்பத்தியில், 148 மெட்ரிக் டன் சாகுபடி செய்து, 26வது இடத்தில் உள்ளது.மாவட்டத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த2011 -12ம் ஆண்டை ஒப்பிடுகையில் சோளம் சாகுபடி மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

    தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு 4.55 லட்சம் ரூபாய் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 41 ஆயிரத்து 267 ரூபாய் மானிய தொகையில் வேளாண் இடுபொருட்கள், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரொக்கப்பரிசு ஆகியவற்றை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வேளாண் துறை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது.
    • 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள வெள்ளகோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வரும் ராபி பருவத்தில் விதைப்பதற்கு ஏற்ற தானியம் மற்றும் தீவன பயிருக்கு ஏற்ற கோ 32 சோளம் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரகத்திற்கு அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரகமானது 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது. இது இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்றது. தானியத்திற்கு விதைப்பு செய்தால் எக்டருக்கு 2 ஆயிரத்து 445 கிலோவும், தீவனம் பயிரிட்டால் எக்டருக்கு 6 ஆயிரத்து 490 கிலோவும் மகசூல் தரக்கூடியது.

    ஆகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோ 32 சோளத்தினை மானிய விலையில் பெற்று பயிர் செய்து உயர் விளைச்சல் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது
    • துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரம் கொங்கல்நகரம் கிராமத்தில் விவசாயி சுந்தரராஜன், கோட்டமங்கலம் விவசாயி ராமசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார நிலை விதைப்பண்ணைகளை, திருப்பூர் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அதன் பின் அவர் கூறியதாவது:-

    உணவே மருந்து என்ற அடிப்படையில், நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது.துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது. தற்போது உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மீதான ஆர்வம் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

    இதில்சோளம் பிரதான சிறுதானிய சாகுபடி பயிராக உள்ளது. பிற சிறுதானியங்களை ஒப்பிடும்போது, அதிகளவு புரதசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோளப்பயிர் சராசரியாக 400 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகம் 105 முதல் 110 நாட்களில், 220 முதல் 300 செ.மீ., வரை வளரும்.மானாவாரி, இறவை என இரண்டு பருவத்திற்கும் ஏற்றது. தீவனம், தானியம் என இரண்டிற்கும் ஏற்ற ரகமாகும். இலைகள் நன்கு வளைந்து கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

    இதன் ஆயிரம் தானிய எடை 16.25 கிராமாக இருப்பதால் ெஹக்டேருக்கு சராசரியாக 2,445 கிலோ, தானிய மகசூலும், 6,490 கிலோ தீவனமும் தரும் ரகமாகும். தானியம் அதிக புரதசத்தும் (11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம்) நார்ச்சத்தும் (4.95 முதல் 5.8 சதவீதம்) கொண்டது. எனவே இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    மேலும் சிறுதானிய சோளம் சாகுபடிக்கு விதை பண்ணைகளை உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி உரிய தொழில் நுட்ப தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்ய வேண்டும் என விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    ×