search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மா ஸ்வராஜ்"

    இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளது மிகவும் சிறப்பான செய்தி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது #IndPakTalks #US
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

    இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும்  இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான செய்தி சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. மிகவும் சிறப்பான செய்தி இது என்று நான் கருதுகிறேன்” என்றார். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IndPakTalks #UNGA
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ராவீஷ் குமார் தெரிவித்தார். 
    சுஷ்மா சுவராஜை சமூக வலைதளங்களில் சிலர் மோசமான வகையில் கிண்டல் செய்து வந்தது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்த கருத்தும் வெளிவராத நிலையில், அந்த அமைதியை ராஜ்நாத் சிங் உடைத்துள்ளார். #SushmaSwaraj #RajnathSingh
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கணவர் முஸ்லிம் என்பதால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, அந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என கூறி அந்த அதிகாரிக்கு ஆதரவாக சுஷ்மா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சுஷ்மாவுக்கு எதிராக மோசமாக விமர்சிக்க, பொங்கி எழுந்த அவர் வெளிப்படையாகவே இது தொடர்பாக ட்வீட் செய்ய தொடங்கினார். பலர் எல்லை மீறி சுஷ்மாவின் கணவரையும் சேர்ந்து விமர்சித்தாலும், பாஜகவிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த கண்டிப்பும் வரவில்லை.



    இதற்கிடையே, தனக்கு எதிரான ட்வீட்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில், 57 சதவிகிதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் சுஷ்மா மீதான இந்த சைபர் தாக்குதல்களை கண்டித்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த உள்துறை மந்திரி, சுஷ்மா மீதான விமர்சனங்கள் தவறானவை என கூறினார். 
    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா மொபைல் செயலியை, 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். #PassportSeva #MEA #SushmaSwaraj
    புதுடெல்லி:

    புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன பாஸ்போர்டுக்கு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘பாஸ்போர்ட் சேவா’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக தேதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

    இந்நிலையில், 2 நாட்களில் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் கம்மெண்ட் செய்திருந்தாலும், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×