search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்"

    லண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், குரோசியா வீரர் மரின் சிலிச், ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், குரோசியா வீரர் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-5 என ஜோகோவிச் போராடி கைப்பற்றினார். 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த செட்டை சிலிச் 7-6 (6-4) என போராடி கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிலிச் அதிரடியாக விளையாடினார். இறுதியில் அந்த செட்டை சிலிச் 6-3 என கைப்பற்றினார்.

    இதனால் 5-7, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிலிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic
    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். #QueensClubChampionships #NovakDjokovic #MarinCilic

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் இன்று அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-6 (7-5) என போராடி ஜோகோவிச் கைப்பற்றினார். 

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் 6-4 என அந்த செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - சிலிச் பலப்பரீட்சை செய்கின்றனர். #QueensClubChampionships #NovakDjokovic #MarinCilic
    சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 800 வெற்றிகளை பதிவுசெய்துள்ள செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், தன்னால் 50 வயது வரை கூட விளையாட முடியும் என கூறியுள்ளார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800

    லண்டன்:

    லண்டனில் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் - பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர்.

    இந்த போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச், 7-5 என போராடி கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொள்கிறார்.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளில் 800 வெற்றிகளை ஜோகோவிச் பதிவு செய்தார். இந்த சாதனையை எட்டிய 10-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். இந்த வெற்றிக்கு பின் ஜோகோவிச் பேட்டியளித்தார்.


    பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டி

    அப்போது, உங்களால் எத்தனை வயது வரை விளையாட முடியும் என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 40 என யார் சொன்னது? நான் 50 என்றேன். எனவே இன்னும் 19 ஆண்டுகள் மீதமுள்ளது. நான் இரண்டு மடங்கு வெற்றிகள் பெற நிறைய நேரம் இருக்கிறது. 50, 60, 70. எவ்வளவு என தெரியவில்லை. அதற்கு எந்த வரம்பையும், எந்த எண்ணையும் நிர்ணயிக்க விரும்பவில்லை. 

    எனக்கு விளையாட வேண்டும் எனும் எண்ணம் இருக்கும் வரை நான் விளையாடுவேன். இந்த விளையாட்டை நான் உண்மையாகவே அனுபவித்து விளையாடுகிறேன், எனவே இன்னும் நிறைய நேரம் இருக்கும் என நம்புகிறேன். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், மேலும் அதில் வெற்றி பெற முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நான் காயம் அடைந்த போதும், அறுவை சிகிச்சையின் போது எல்லாவற்றையும் நினைத்து, எனக்குள் நானே கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். ஆனால் எல்லோருக்கும் அந்த தருணங்கள் வரும் என்பது உங்களுக்கு தெரியும். எல்லோருக்கும் சந்தேகமான தருணங்கள் உள்ளன. அது தான் வாழ்க்கை. வாழ்க்கை வரும் சுழற்சிகள், உங்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் அவற்றில் இருந்து கற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்பது உங்களை பொருந்தே இருக்கிறது.

    நான் சொன்னது போல, எவ்வளவு காலம் எடுக்கும், என்று முடியும் என்பதை நான் நிர்ணயிக்க விரும்பவில்லை. எனக்கு 31 வயதாகிறது, இருப்பினும் உண்மையில் நான் 19 வயது போல் உணர்கிறேன். நான் தொடர்ந்து போக விரும்புகிறேன், அதை என்னை எங்கு கொண்டுசெல்கிறது என்பதையும் காண விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800
    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், டிமித்ரோவ் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். #QueensClubChampionships #NovakDjokovic #GrigorDimitrov

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. 

    இதில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச், அஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6-2 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ், போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினாவின் டாமிர் ஜூமரை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை டிமித்ரொர்வ் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-6 (7-4) என ஜூமர் போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டை டிமித்ரோவ் 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற டிமித்ரோவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதுதவிர ஆஸ்திரேலியாவின் நிக் கைர்கியோஸ், பிரிட்டனின் கைல் எட்மண்ட், கனடாவின் மிலோஸ் ரவுனிக் உள்ளிட்டோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #QueensClubChampionships #NovakDjokovic #GrigorDimitrov
    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபன்னா, பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin

    லண்டன்:

    ஆடவருக்கான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபன்னா - பிரான்சின் ரோஜர்-வேஸ்லின் ஜோடி, தென்னாப்ரிக்காவில் கெவின் ஆண்டர்சன் - பிரான்சின் ஜூலியன் பென்னெடியூ ஜோடியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போபன்னா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் செட்டை போபன்னா - ரோஜர் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆண்டர்சன் - ஜூலியன் ஜோடி சிறப்பாக எதிர்ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.

    இருப்பினும் போபன்னா-ரோஜர் ஜோடி அந்த செட்டையும் 7-6 (7-3) என கைப்பற்றியது. இறுதியில் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபன்னா-ரோஜர் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. #QueensClubChampionships #RohanBopanna #RogerVasselin
    ×