search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குயின்டான் டி காக்"

    தனது ஷாட்டில் அதிக வலிமையை பெற்றிருக்கும் ரிஷப் பந்த் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார் என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரின் 12 சீசன் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 27 பந்தில் தலா 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் 13 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

    வருங்காலத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக திகழ்வார் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். இவருடன் தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குயின்டான் டிக் காக் டெல்லி அணியில் இணைந்து விளையாடிவர்.

    இவர் ரிஷப் பந்த் குறித்து கூறுகையில் ‘‘நான் ரிஷப் பந்த் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் மிகவும் குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்துள்ளதை பார்க்கிறேன். அவரது ஷாட்டில் அதிக அளவு பவர் உள்ளது. அவர் மிகவும் வலுவான வீரர். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்’’ என்றார்.
    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் குயின்டான் டி காக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டு பிளிசிஸ் 43 ரன்கள் சேர்த்தார்.



    மில்லர், டுமினி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையாக 25 மற்றும் 31 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும்.
    ×