search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் கவிழ்ந்து விபத்து"

    • திருமண முகூர்த்த புடவை எடுக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 37).

    இவர் தனது உறவினர் திருமண விழாவிற்கு புடவை எடுக்க முடிவு செய்தார். அதன்படி குணசேகரன் தனது மனைவி ஜெயக்குமாரி (28), மகன் நிஷாந்த் (3), மற்றும் உறவினர்களான சுதா (34), எழிலரசி (37), உஷா (43), ஜான்சி ராணி (45) புவனேஸ்வரி (23) ஆகிய 7 பேருடன் திருமண முகூர்த்த புடவை வாங்க கொத்தூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் சென்றனர்.

    காரை மேல் பச்சூர் பகுதியைச் சேர்ந்த கவுஸ்கர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கொத்தூர் அடுத்த மேலூர் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிக்கெட்டு ஓடி 3 பல்டி அடித்து தலைகீழாக குப்புற கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த, 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    காரில் சிக்கிக்கொண்ட அனைவரும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்து கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, குப்புற கவிழ்ந்த கார் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஜெயக்குமாரி, நிசாந்த், சுதா, எழிலரசி ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே ஓடையா கவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை டாக்டர்.செந்தில்குமார் தனது காரில் மருந்து வாங்குவதற்காக ஊஞ்சல்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓட்டர் கரட்டு ப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் அந்த பகுதியில் செந்தில்குமார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் செந்தில்குமாரை மீட்டனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் கார் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார்.
    • படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கொட்டரக்கண்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்ற அறிவழகன் (32). இவர் கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார். அவருடன் மஞ்சூர் ஓணிகண்டியை சேர்ந்த சதீஷ்குமார்(40), கரியமலை பெரியார் நகரை சேர்ந்த அருண்(27), கொட்டரக்கண்டியை சேர்ந்த ரவி (39) ஆகியோரும் வந்தனர்.

    கார் மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி அருகே பெரும்பள்ளம் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு பில்லூர் காவல் நிலைய போலீசார் வந்து படுகாயமடைந்தவர்களை மேல்சிகி்ச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே அஜ்ஜுர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 53). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று இரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவகுமார் ஓட்டினார். அரவேனு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கல்லூரி மாணவர்கள் 5 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஊட்டியில் இருந்து பைக்காரா சென்று படகு சவாரி செய்ய திட்டமிட்டனர்.

    இதற்காக அவர்கள் காரில் ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட மாணவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் கார் பலத்த சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து விபத்தை ேநரில் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பைக்காரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் காரை மீட்டனர். மேலும் மாணவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கோவைக்கு திரும்பினர்.

    மாணவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    ×