என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை-மஞ்சூர் மலை பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
- கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார்.
- படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கொட்டரக்கண்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்ற அறிவழகன் (32). இவர் கட்டிட பொருட்கள் வாங்க காரில் நேற்று கோவைக்கு வந்தார். அவருடன் மஞ்சூர் ஓணிகண்டியை சேர்ந்த சதீஷ்குமார்(40), கரியமலை பெரியார் நகரை சேர்ந்த அருண்(27), கொட்டரக்கண்டியை சேர்ந்த ரவி (39) ஆகியோரும் வந்தனர்.
கார் மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி அருகே பெரும்பள்ளம் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் முள்ளி செயின் ப்ராசஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பில்லூர் காவல் நிலைய போலீசார் வந்து படுகாயமடைந்தவர்களை மேல்சிகி்ச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






