search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15-foot ditch and"

    • கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே ஓடையா கவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை டாக்டர்.செந்தில்குமார் தனது காரில் மருந்து வாங்குவதற்காக ஊஞ்சல்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓட்டர் கரட்டு ப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் அந்த பகுதியில் செந்தில்குமார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் செந்தில்குமாரை மீட்டனர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் கார் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×