search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் போட்டி"

    • முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்.
    • நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    மதுரையை பூர்வீமாக கொண்ட தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (வயத 23) பெர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் திருமுருகன்பூண்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு பொன்னாடை போர்த்தி ரூ.5 லட்சம் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினர். மேலும் பயிற்சியாளர் சுனில் குமாருக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிக் குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்த கலந்துரையாடலில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பதிலளித்தார்.

    • நாட்டுக்காக பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.
    • அனைத்து ஆதரவையும் அளித்த இந்தியாவுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்ட ஏராளமானோர் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    எனக்கு அனைத்து ஆதரவையும் அன்பையும் அளித்த இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார். வரவேற்பு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு சிறந்த உணர்வு மற்றும் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இது எனது முதல் பெரிய பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

    நாட்டுக்காக பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பூஜா கெலாட் குறிப்பிட்டார்.

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
    • இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.

    இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.

    முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • நியூசிலாந்து மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியம் பிட்ச்போர்டு ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து இன்று மேலும் ஒரு தங்கம் வென்று 18 தங்கப் பதக்கங்களுடன், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பூஜா கெலாட் தெரிவித்தார்.
    • பூஜாவின் வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கல பதக்கம் வென்றார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூஜா கெலாட், வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என விரும்பியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தார். மேலும் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    பூஜா கெலாட்டின் உருக்கமான பேச்சை அறிந்த பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். வெற்றி கொண்டாடப்படவேண்டியது என்றும், வருத்தப்பட வேண்டிய தருணம் இல்லை என்றும் கூறி உள்ளார் பிரதமர்.

    பூஜாவின் வெண்கல பதக்கம் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், அவரது வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் சரின் தங்கம் வென்றார்.
    • இன்று ஒரே நாளில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் இன்று இந்தியா 2 பதக்கம் வென்றது.
    • இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.

    இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×