search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரருக்கு பாராட்டு
    X

    பாராட்டு விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு காசோலை வழங்கப்பட்ட காட்சி.

    காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரருக்கு பாராட்டு

    • முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்.
    • நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    மதுரையை பூர்வீமாக கொண்ட தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (வயத 23) பெர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். முதல்முறையாக இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் திருமுருகன்பூண்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேஜஸ்வின் சங்கருக்கு பொன்னாடை போர்த்தி ரூ.5 லட்சம் காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினர். மேலும் பயிற்சியாளர் சுனில் குமாருக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளிக் குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்த கலந்துரையாடலில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பதிலளித்தார்.

    Next Story
    ×