search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுண்டி கிரிக்கெட்"

    • சர்ரே அணி வெற்றி பெற 501 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணியின் சிப்ளே, பென் போக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டிவிஷன் 1-ல் கெண்ட் அணியும், சர்ரே அணியும் மோதின. டாஸ் வென்ற கெண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கெண்ட் அணி முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் காக்ஸ் சதமடித்து 133 ரன்கள் எடுத்தார். ஜோய் எவிசன் 58 ரன்கள் சேர்த்தார்.

    சர்ரே அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டும், ஜோர்டான் கிளார்க், கஸ் அட்கின்ஸன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் அபாட் 34 ரன்கள் எடுத்தார்.

    கெண்ட் அணி சார்பில் மேத்யூ குயின், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஜோய் எவிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடிய கெண்ட் அணி 344 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டவாண்டா முயியே 79 ரன்னும், ஹமிதுல்லா குவாடி 72 ரன்னும், டி பெல் டிரம்மண்ட் 59 ரன்னும் எடுத்தனர்.

    சர்ரே அணி சார்பில் ஜோர்டான் கிளார்க் 5 விக்கெட்டும், டேனியல் வோரல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சர்ரே அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் வீரர்கள் அதிரடியில் இறங்கினர்.

    அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். ஜேமி ஸ்மித் 114 ரன்னும், பென் போக்ஸ் 124 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். டாம் லாதம் 58 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சர்ரே அணி 5 விக்கெட் இழப்புக்கு 501 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. டொமினிக் சிப்ளே 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
    • அர்ஷ்தீப் சிங் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணியான கெண்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் பென் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். அருமையான இன்ஸ்விங் மூலம் (LBW) இந்த விக்கெட் அவருக்கு கிடைத்தது.

    அவர் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நான்கு மெய்டன்கள் அடங்கும்.

    கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.


    24 வயதான அர்ஷ்தீப் சிங் 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் தனது முதல் அறிமுக போட்டியில் களமிறங்கினார்.

    அர்ஷ்தீப் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் 26 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20-யில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/37 ஆகும்.

    அவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார், அதில் அவர் 25 விக்கெட்டுகளை சராசரியாக 23.84 மற்றும் எகானமி ரேட் 2.92, 5/33 என்ற சிறந்த பந்துவீச்சுடன் எடுத்துள்ளார்.

    ×