search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லீரல் பாதிப்பு"

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    • ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.

    அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×