search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட அனுமதி"

    • 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
    • முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரிக்கும் பகுதிகள், முழுமை திட்டப்பகுதிகளாக கண்டறிந்து அறிவிக்கும் விதமாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    இதில் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் இணைந்து பகுதி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8 மீ., அளவுக்கும் குறைவான பொது வழிப்பாதை அமைந்த குடியிருப்பு பகுதிகள் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டது.

    இதில் முதல் மண்டலத்தில் 229 குடியிருப்பு பகுதிகள்,2 வது மண்டலத்தில் 109 பகுதிகள், 3 வது மண்டலத்தில் 274 பகுதிகளும், நான்காவது மண்டலத்தில் 100 குடியிருப்பு பகுதிகள் இந்த வரையறைக்குள் உள்ளது கண்டறியப்பட்டது.மண்டல வாரியாக இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ள வார்டு எண், வீதி பெயர், வீதியின் அகலம் ஆகியன கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு பகுதி வாரியாக குறியீட்டு எண்ணும் வழங்கப்பட்டது. இப்பணி முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள், நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இப்பகுதிகள் முழுமைத் திட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கட்டட அனுமதி வழங்குவதில் சில நடைமுறைகள் எளிதாக்கப்படும்.முழுமைத்திட்ட பகுதி மற்றும் குறுகலான வீதிகள் அமைந்த பகுதி என்ற நிலையில் கட்டடங்களின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் திறந்த வெளியிடங்கள் விடுவதில் விதிமுறைகளில் தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×