search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடும் ரெயில்"

    ஓடும் ரெயிலில் ஏறுவதை தடுக்க ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது. #Mumbai #LocalTrain #BlueLight
    மும்பை:

    மும்பையில், மின்சார ரெயில்கள் புறப்பட்ட பின்னர் ஏற முயன்று பிளாட்பார இடைவெளியில் தண்டவாளத்தில் விழுந்து பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க மத்திய ரெயில்வே, மின்சார ரெயில் பெட்டிகளின் வாசற்படிகளின் மேல், ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது.

    சோதனை முயற்சியாக ஒரு மின்சார ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் பிளாட்பாரத்தில் நின்றுவிட்டு கிளம்பியதும், இனி ஏறக்கூடாது என பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்த விளக்கு எரியும்.

    இது தொடர்பாக பயணிகளின் கருத்துகளை கேட்ட பின்னர் அனைத்து ரெயில்களிலும் இந்த விளக்குகளை பொருத்த வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய ரெயில்வே கூறியுள்ளது. இந்த திட்டத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று சில பயணிகள் தெரிவித்தனர்.
    ஓடும் ரெயிலில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி பரிதாபமாக உயிர் இழந்தார். #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி (வயது 53). இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புஜ்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்தார். ரெயில் காந்திதாம்-சுரஜ்பாரி இடையே வந்த போது, ரெயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயந்தி பனுசாலியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெயந்தி பனுசாலி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் அந்த வழக்கை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead 
    ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வாலிபரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    ராமேசுவரத்தில் இருந்து அரியானா மாநிலம் பரிதாபாத்துக்கு நேற்று முன்தினம் சர்க்கார் சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைமேடை 5-ல் வந்தடைந்தது.

    பின்னர் பரிதாபாத் நோக்கி புறப்பட்ட ரெயிலில், வாலிபர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அந்த வாலிபரின் கால் தடுமாறி அவர் ஓடும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமன் விரைந்து செயல்பட்டு, ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட வாலிபரை உடனே பிடித்து வெளியே இழுத்து மீட்டார்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமனை பாராட்டினர்.

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் 35 வயதுடைய பெண் அவசர அவசரமாக ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் நடுவில் சிக்கிய அந்த பெண்ணை 11-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனா விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.

    இந்த செயல் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனாவை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர். 
    ×