search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayanti Bhanushali"

    ஓடும் ரெயிலில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி பரிதாபமாக உயிர் இழந்தார். #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி (வயது 53). இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புஜ்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்தார். ரெயில் காந்திதாம்-சுரஜ்பாரி இடையே வந்த போது, ரெயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயந்தி பனுசாலியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெயந்தி பனுசாலி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் அந்த வழக்கை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead 
    பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை அடுத்து குஜராத் மாநில பா.ஜனதா துணை தலைவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்த 53 வயதாகும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பானுசாலி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பா.ஜனதா தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய ராஜினாமாவை பா.ஜனதா ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பானுசாலி கடந்த 2007 முதல் 2012 வரையில் அப்தாசா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    சூரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் பானுசாலிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்யக்கோரி புகார் கொடுத்தார். இதுவரையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கமிஷனர் சதிஷ் சர்மா கூறியுள்ளார். பேஷன் டிசைன் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஏமாற்றி என்னை கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

    என்னை மிரட்டுவதற்கு, அவருடைய உதவியாளர்களில் ஒருவர் செல்போனில் இச்சம்பவத்தை படம் எடுத்து உள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் எனக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார் பானுசாலி.
    ×