search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
    X

    ஓடும் ரெயிலில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை

    ஓடும் ரெயிலில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி பரிதாபமாக உயிர் இழந்தார். #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயந்தி பனுசாலி (வயது 53). இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புஜ்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்தார். ரெயில் காந்திதாம்-சுரஜ்பாரி இடையே வந்த போது, ரெயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயந்தி பனுசாலியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெயந்தி பனுசாலி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் அந்த வழக்கை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FormerBJPMLA #JayantiBhanushali #ShotDead 
    Next Story
    ×