search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள் நிரம்பின"

    • சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன.
    • 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலம் நிலவிய ஆகஸ்ட் மாதத்தில் 88 ஏரிகளில் கன்னங்குறிச்சி மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, கமலாபுரம் சின்ன ஏரி,கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணிவிழுந்தான் ஏரி,

    தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி உள்பட

    29 ஏரிகள் முழுமையாக நிரம்பின. அபினவம் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி உள்பட 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    தற்போது வடகிழக்கு பருவமழை காலம் காரண

    மாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் வரத்து, கால்வாய்களில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து 88 ஏரிக ளில், 55 ஏரிகள் முழுமையாக நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 75 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பிய நிலையில் 4 ஏரிகள் உள்ளன.

    50 முதல் 74 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில் 8 ஏரிகள் உள்ளன. ஆறு ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் 49 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 25% குறைவாக 4 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 11 ஏரிகள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. வடகி ழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிப்பதால் 50% வரை நீர்மட்டம் எட்டி உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள ஏரிகளும், வறண்ட நிலையில் உள்ள ஏரிகளும், வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் நிரம்ப வேண்டும் என்றும், அதற்கான ஆக்கிர மிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பரமத்தி வேலூர், மங்களபுரம், ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனூர் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை–யால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 2 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 6 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பிள்ளன. மேலும் 27 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலே காட்சி அளிக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்ச–மாக பரமத்தி வேலூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மங்களபுரத்தில் 18.40 மில்லி மீட்டர், எருமப்பட்டி-5, மோகனூர்-13, நாமக்கல்-2, புதுச்சத்திரம்-11, ராசி புரம்-14.3, சேந்தமங்கலம்-9, திருச்செங்கோடு-1, கலெக்டர் அலுவலக பகுதி-6, கொல்லி மலை-18 என மாவட்டம் முழுவதும் 117.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ×