search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எய்ம்ஸ் ஆஸ்பத்திரி"

    • பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார்.
    • வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஜம்முவில் நடைபெறும் விழாவில், சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.

    அந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,660 கோடி செலவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இவ்விழா நடக்கிறது.

    ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரபிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளை அவர் திறந்து வைக்கிறார்.

    • தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • தொழிலாளர்கள் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன.

    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கப்பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

    அதனை தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 17-வது நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கப்பாதையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது.

    இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்சுகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் 41 தொழிலாளர்களும் விமானப்படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் 41 பேரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.

    முன்னதாக தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் டாக்டர் ரவிகாந்த் "தொழிலாளர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன. அவர்கள் உடல் ரீதியாக இயல்பானவர்கள். மருத்துவ ரீதியாக நிலையானவர்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்" என்றார். 

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி னர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    சென்னை :

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தொடர்பாக சில அதிகாரப்பூர்வமான விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கடந்த 1-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதின் தற்போதைய நிலை என்ன? என்று மத்திய அரசிடம் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கான விளக்கம் 4-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

    அதில், பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குனர் சஞ்சய் ராய் இந்த அதிகாரப்பூர்வ தகவலை இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.

    மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து பெறப்பட்ட தகவல் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்து கொடுக்கப்பட்டு, மதுரை தோப்பூரை தேர்வு செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



    அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த மாறுதலும் இல்லை. எந்த தடையும் இல்லை. விதிமுறைப்படி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

    மத்திய அரசின் துணை நிறுவனமான ‘ஹையிட்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு அந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 கோடி நிதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை பணிகள் முடிந்து இப்போது விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவிட்டது. முதற்கட்டமாக ரூ.1,264 கோடி உத்தேசமாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி நிதித்துறைக்கு அனுப்பி மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, பணிகளில் சுணக்கமோ, தாமதமோ, தடையோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடமாகும். ஒரு ஏக்கர் நிலம் கூட தனியாருக்கு சொந்தமானது கிடையாது. அதனால், நிலம் சம்பந்தமான எந்த பிரச்சினையும் இல்லை.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க விரைவில் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்க வேண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார். நானும், சுகாதாரத்துறை செயலாளரும் 9-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    ×