search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டித்தரக்கோரி: திண்டுக்கல்லில் காங்கிரசார் செங்கல் அனுப்பும் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டித்தரக்கோரி: திண்டுக்கல்லில் காங்கிரசார் செங்கல் அனுப்பும் போராட்டம்

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி னர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×