search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறையூர் வெக்காளியம்மன்"

    • பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
    • அக்னி சட்டிகளை ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12.15 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் திருச்சி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் 100-க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு வெக்காளியம்மன் கோவிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • 15-ந்தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
    • 16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் திருநாளான நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 14-ந்தேதி நடக்கிறது.
    • 15-ந் தேதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடும், வாஸ்துசாந்தியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு கேடயத்தில் வெக்காளியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மேலும், 13-ந் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • தேரோட்டம் 14-ந் தேதி நடக்கிறது.
    • 15-ந் தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    இதையொட்டி வருகிற 5-ந்தேதி மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. 6-ந்தேதி காலை 8 மணி முதல் காலை 9 மணிக்குள் காப்புகட்டுதல் நடக்கிறது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.

    6-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 7-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு கோவில் சார்பில் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு சாற்றினர். அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடிய, விடிய பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர்.

    • இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.

    முதலில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றுவார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • இந்த விழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா நாளை (வௌ்ளிக்கிழமை) தொடங்கி வருகிற பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார்.

    இதைத் தொடர்ந்து 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு தினந்தோறும் நடைபெறுகிறது. மேலும் காமதேனு, பூதம், அன்னம், கயிலாயம், யானை, சிம்மம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருதல் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 4-ந் தேதி காலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். பிப்ரவரி 5-ந் தேதி மாலை 4 மணிக்கு அம்மன் கேடையத்தில் புறப்பட்டு காராளம்மன் கோவிலுக்கு சேர்தல், அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடும், மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்று வெக்காளியம்மன் கோவில் வந்து சேரும் நிகழ்வும், இரவு 7 மணிக்கு அம்மன் கேடையத்தில் திருவீதி உலா வருதலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள்.
    • வெக்காளியின் கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது.

    கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோவிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது. இதனால் தேவி வீர ஆசனத்தில் தீ சுவாலையுடன் நாகமும் கொண்ட கிரீடமும் சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள். உடுக்கை, பாசம், சூலம் ஏந்தி அசுரனை மிதித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள். அதனால் ஏழை எளிய மக்களின் கூட்டமே இந்த ஆலயத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். குறைகளைத் தீர்த்துக் கொள்ளவோ, ஏதேனும் வேண்டியோ இங்கு வரும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி விண்ணப்பித்து வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி, பிறகு அதை அங்குள்ள சூலத்தில் கட்டி வைப்பார்கள். அப்படி கட்டிய நாளில் இருந்து 40 நாட்களுக்குள் அன்னை அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பெரும்பாலும் நடைபெறுகிறது என்பதும் உண்மை.

    இங்கு ஸ்ரீவல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி - தெய்வானை சமேத மயூர கந்தன், காத்தவராயன், புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன், ஸ்ரீதுர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என பல சந்நிதிகள் உள்ளன. வெக்காளி அம்மனுக்கு ஆண்டுதோறும் அநேக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பவுர்ணமியில் நடைபெறும் அபிஷேக வைபவம் அற்புதமான தரிசனம் எனலாம்.

    அதுபோக, சித்திரை திருவிழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், ஆனி கடைசி வெள்ளியில் காய்கனிகள் அலங்கார வழிபாடு, .ஆடி வெள்ளியில் சிறப்புவைபவங்கள். ஆவணியில் சண்டிஹோமம், புரட்டாசியில் நவராத்திரி வழிபாடு, கார்த்திகையில் தீப விழா, தை பொங்கல் வழிபாடு, மாசி கடைசி ஞாயிறில் லட்சார்ச்சனை, பங்குனி முதல் வெள்ளியில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா என இந்த ஆலயத்தில் கொண்டாட்டத்துக்கு குறைவே இல்லை எனலாம். ஆனாலும் இங்கு ஆடியின் ஒவ்வொரு நாளுமே இங்கு சிறப்பு என்றே சொல்லலாம்.

    பெருமைகள் பல கொண்ட, அம்பிகைக்கே உரித்தான இந்த ஆடியில் வாய்ப்பு இருப்பவர்கள் உறையூர் சென்று வெக்காளியின் அருள்பெற்று மகிழலாம். வெக்காளியின் கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது என்பார்கள். தோஷங்கள் விலகும் தலம், பாவங்கள் தொலையும் தலம். புண்ணியங்கள் சேரும் தலம் வெக்காளியின் திருத்தலம். அன்னையின் திருவருளால் நாடும் வீடும் சகலமும் நலம் பெற்று வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

    • திருச்சி உறையூரில் காட்சியளித்துக்  கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன்.
    • இந்த 108 போற்றியை சொல்லி அம்மன் வழிபட்டால் துன்பம் பறந்தோடும்.

    ஓம் சக்தியே போற்றி

    ஓம் இச்சா சக்தியே போற்றி

    ஓம் ஞான சக்தியே போற்றி

    ஓம் வெக்காளி அம்மையே போற்றி

    ஓம் ஆதி சக்தியே போற்றி

    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

    ஓம் ஏழைகளின் தாயே போற்றி

    ஓம் மங்கல நாயகியே போற்றி

    ஓம் மதுரையை எரித்தாய் போற்றி

    ஓம் ஈசனின் தேவியே போற்றி

    ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் தில்லைகாளியே போற்றி

    ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி

    ஓம் அம்மை உமையே போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் மாயனின் தங்கையே போற்றி

    ஓம் மணி மந்திரகாளியே போற்றி

    ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி

    ஓம் செங்கண்மா தங்கையே போற்றி

    ஓம் சிதம்பரம் காளியே போற்றி

    ஓம் வேலனின் தாயே போற்றி

    ஓம் வேல் தந்த வித்தகியே போற்றி

    ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி

    ஓம் சங்கரன் நாயகியே போற்றி

    ஓம் உறையூரின் தேவியே போற்றி

    ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி

    ஓம் மங்கையர்க்கரசியே போற்றி

    ஓம் மாணிக்க வல்லியே போற்றி

    ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி

    ஓம் கற்பகத்தருவே போற்றி

    ஓம் கனக வல்லியே போற்றி

    ஓம் காரணி பூரணி போற்றி

    ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி

    ஓம் சாம்பவி சங்கரியே போற்றி

    ஓம் அங்கையர் கண்ணியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி

    ஓம் வெக்காளி தேவியே போற்றி

    ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி

    ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி

    ஓம் சிம்ம வாகினியே போற்றி

    ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி

    ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி

    ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி

    ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணியே போற்றி

    ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி

    ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி

    ஓம் பஞ்சாசர பகவதியே போற்றி

    ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி

    ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி

    ஓம் நவ வடிவான நாராயணியே போற்றி

    ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி

    ஓம் சிவ சிவ சிவசங்கரியே போற்றி

    ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி

    ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி

    ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி

    ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி

    ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி

    ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி

    ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி

    ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி

    ஓம் மூன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி

    ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி

    ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

    ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி

    ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி

    ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி

    ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி

    ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி

    ஓம் வேதாந்த மால வித்தகியே போற்றி

    ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி

    ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி

    ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி

    ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி

    ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி

    ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி

    ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி

    ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி

    ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி

    ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி

    ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி

    ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி

    ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி

    ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி

    ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி

    ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி

    ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி

    ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி

    ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி

    ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி

    ஓம் மந்திர சொரூபினி மவுலியே போற்றி

    ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி

    ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி

    ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி

    ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி

    ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி

    ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி

    ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி

    ஓம் மகிமை மிகு காஞ்சி காமாட்சியே போற்றி

    ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி

    ஓம் மணங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி

    ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி

    ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்யேமை போற்றி.

    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 48 நாட்களாக நடைபெற்று வந்த மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா கடந்த 20-ந்தேதி காலை ஆனைமுகன் வழிபாடு வேள்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனிடம் அனுமதி பெறப்பட்டது. இரவு 9 மணிக்கு குடம் வழிபாடு, தேவியர் போற்றி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி காலையில் முதற்கால சண்டி வேள்வி, மாலையில் 2-ம் காலம், நேற்று முன்தினம் காலையில் 3-ம்கால சண்டி வேள்வி, மாலையில் 4-ம் கால சண்டி வேள்வி நடைபெற்றது.

    மண்டலாபிஷேக நிறைவு நாளான நேற்று காலை 7.30 மணிக்கு 5-ம் கால சண்டி பெருவேள்வி மற்றும் மண்டாலாபிஷேக நிறைவு வழிபாடு, கன்னியர் வழிபாடு, சுமங்கலி வழிபாடு, காளையர் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 11 மணிக்கு சதசண்டி பெருவேள்வி நிறைவு தீப வழிபாட்டை தொடர்ந்து பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் லட்சுமணன், உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
    • இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று காலை ஆனைமுகன் வழிபாடு வேள்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனிடம் அனுமதி பெறப்பட்டது. காலை 9 மணிக்கு நவகோள் வழிபாடும், காலை 10.30 மணிக்கு குடம் நிறுவுதலும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஆனைமுகன் வழிபாடு, தீப வழிபாடு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு குடம் வழிபாடு, தேவியர் போற்றி வழிபாடு தொடங்கியது.

    மேலும் 48-ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முதற்கால சண்டி வேள்வி, மாலையில் 2-ம் காலம்,இன்று (திங்கட்கிழமை) காலையில் 3-ம்காலம், மாலையில் 4-ம் காலம், நாளை காலை 7.30 மணிக்கு 5-ம் கால சண்டி வேள்வி மற்றும் மண்டலாபிஷேக நிறைவு வழிபாடு, கன்னியர் வழிபாடு, சுமங்கலி வழிபாடு, காளையர் வழிபாடு நடைபெறுகிறது.

    பிற்பகல் 11 மணிக்கு சதசண்டி பெருவேள்வி நிறைவு தீப வழிபாடும், பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் லட்சுமணன், உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஜூலை 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பிரவேசபலி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி மாலை வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கருவறையில் அம்மன் மேற்கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து மக்களை காத்து வருகிறார். இந்நிலையில் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்த மண்டபம், அர்த்த மண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளித்தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்களை கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்களை பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்று வந்தன.

    இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் 1-ந்தேதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, 8.30 மணிக்கு வெக்காளியம்மனிடம் அனுமதி பெறுதல், மாலை 5.30 மணிக்கு பிரவேசபலி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    மறுநாள் காலை 7 மணிக்கு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வருதல், 8 மணிக்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து யாகசாலை நிர்மானம் நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, மாலை 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜை நடைபெறுகிறது.

    வருகிற 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், 4-ந்தேதி காலை 7.20 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு 5-ம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 7-ம் கால யாகபூஜையும், 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 6 மணியளவில் யாத்ராதானம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேருதல் நடக்கிறது.

    6-ந்தேதி காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்தி விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன், மூலவ மூர்த்திகளின் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், லட்சுமணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×