search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உம்மன்சாண்டி"

    • கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.
    • மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் கேரளாவை உலுக்கியது.

    அப்போது மந்திரிசபையில் இருந்த அனைத்து மந்திரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட பெண் கூறி இருந்தார். மேலும் உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நேற்று சி.பி.ஐ. திருவனந்தபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

    ×