search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் ஓட்டம்"

    • செல்வி தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட பொம்மியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது.
    • 2 பெண்களின் கண்ணை மறைத்த ஓரின காமம் இரு வீட்டினரையும் கலங்கவைத்துள்ளது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளியின் மனைவி பொம்மி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை .

    இவரது பக்கத்து வீட்டில் செல்வி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். செல்விக்கு 30 வயது ஆகிறது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தொடக்கத்தில் பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் பொம்மிக்கும், செல்விக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

    இருவரது கணவர்களும் வேலைக்கு சென்ற சமயங்களில் செல்வியின் வீட்டுக்கு சென்று பொம்மி பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இருவரும் தங்கள் குடும்ப பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதும், கொஞ்சி கொஞ்சி பேசுவதுமாக இருந்தனர். நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகமானது.

    பெண்கள் தானே பழகுகிறார்கள் என்று அவர்களது கணவன்மார் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சூழலில் செல்வி வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். அவருடன் பொம்மியும் வேலைக்கு போக தொடங்கினார்.

    செல்வி தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட பொம்மியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது. இருவரின் அதிகப்படியான அன்பு நாளடைவில் லெஸ்பியன் உறவாக மாறியது. அடிக்கடி ஊர் ஊராக சுற்றியும் அவர்கள் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்த விவரம் மெல்ல இருவரது கணவர்களுக்கும் தெரியவந்தது. இருவீட்டிலும் மனைவியை கண்டித்தனர். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் செல்வியின் கணவர் வீட்டை காலி செய்து விட்டு திம்மநாயக்கன்பட்டிக்கு குடி பெயர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி பொம்மி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர் பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை . அப்போது வீட்டில் படுக்கை அறையில் பொம்மி கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அதனுடன் தாலியும் இருந்தது.

    கடிதத்தில் எனக்கு கணவருடன் வாழ பிடிக்க வில்லை. அதனால் தான் தாலியை கழட்டி வைத்திருக்கிறேன். நான் எனக்கு பிடித்த செல்வியுடன் செல்கிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தை கூறி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து பொம்மியை தேடி வந்தார். அதேவேளையில் செல்வியையும் காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவரது கணவரும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் மாயமான 2 பேரையும் தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவும், ஏற்கனவே ஒரு முறை அவர்கள் ஊரைவிட்டு ஓடியதும் தெரியவந்தது. இரு வீட்டாரும் அவர்களை அழைத்துவந்து அறிவுரைகள் கூறினர்.

    செல்வியின் வீட்டில் அவருக்கு புத்திமதி கூறியதோடு 3 குழந்தைகள் எதிர்காலம் கருதி நடந்து கொள் என்று கண்டித்தனர். இந்த சூழலில்தான் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு ஓட்டம் பிடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து அவர்களது செல்போன் எண்களை வைத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். விரைவில் அவர்கள் எங்கிருந்தாலும் மீட்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் தங்களது தாயை காணாமல் செல்வியில் 3 குழந்தைகளும் கதறி அழுதபடி தவித்து வருகிறார்கள். 2 பெண்களின் கண்ணை மறைத்த ஓரின காமம் இரு வீட்டினரையும் கலங்கவைத்துள்ளது.

    • கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.
    • கணவர் தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள தென்செங்கம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    தனது கைக்குழந்தையுடன் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு செல்லும் இளம்பெண் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம் பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.

    பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். தனது மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் குழந்தையுடன் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற செல்லம்மாள் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • புகாரின்பேரில் மாயமான செல்லம்மாள் குறித்து மாரண்ட ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளி அருகே அத்திமுட்லூ காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற செல்லம்மாள் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ள சுரேஷ்குமார் தனது மனைவி செல்லம்மாள் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வங்கி பாஸ் புத்தகம், ரேஷன் அட்டை உள்ளவற்றையும் கொண்டு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின்பேரில் மாயமான செல்லம்மாள் குறித்து மாரண்ட ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல இண்டூர் அருகேயுள்ள ஹன்டஅள்ளி பகுதியில் மாதையன் என்பவர் தனது மகளான கல்லூரி மாணவி 10-ந்தேதி முதல் காணாமல் போய்விட்டார் என்று இண்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    மேலும் ஒகேனக்கல் அருகேயுள்ள நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவர் தனது மனைவி அமுதவல்லி என்பவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார் என்று ஒகேனக்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதேபோல பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள மஞ்சவாடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது மனைவி கிருத்திகா என்பவர் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று பாப்பிரெட்டிபட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.

    • 4 வயது பெண் குழந்தையையும் அழைத்து சென்றார்
    • இளம்பெண்ணுக்கு மில்லில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது

    கோவை,

    கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அவர் வேலை பார்க்கும் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் கள்ளக்காதலனை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரண மாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் வேறு ஒரு மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்ன

    ரும் இளம்பெண் வாலிபரு

    டனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது குழந்தையுடன் வீட்டில் இருந்த இளம்பெண் தனது 4 வயது பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாததது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தவிக்க விட்டு 4 வயது பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • 2 குழந்தைகளை அழைத்து சென்றார்.
    • இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை

    கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இளம்பெண் வேலைக்கு செல்லும் போது வாலிபர் ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை இளம்பெண்ணின் கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கட்டிட தொழிலாளியின் மனைவி தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உள்ள ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • 3 குழந்தைகளும் பாட்னாவில் உள்ள கட்டிட தொழிலாளியின் தாயார் வீட்டில் இருந்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 27 வயது வாலிபர். கட்டிட தொழிலாளி. இவர் தனது 26 வயது மனைவியுடன் கோவை சுந்தராபுரம் இந்திரா நகரில் வசித்து வந்தார்.

    அந்த கட்டிட தொழிலாளியின் மனைவி சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகளும் பாட்னாவில் உள்ள கட்டிட தொழிலாளியின் தாயார் வீட்டில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கட்டிட தொழிலாளியின் மனைவி தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உள்ள ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் கட்டிட தொழிலாளிக்கு தெரியவந்தது. இதனை அவர் கண்டித்து வந்தார். ஆனால் அவரது மனைவி அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கட்டிட தொழிலாளி தூங்குவதற்கு சென்றார். பின்னர் அதிகாலை கண்விழித்து பார்த்த போது அருகில் இருந்த அவரது மனைவி காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே வந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அப்போது தான் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கட்டிட தொழிலாளி போத்தனூர் போலீஸ் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து மாயமான 3 குழந்தைகளின் தாயாரை தேடி வருகின்றனர். 

    • இளம்பெண் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டார்.
    • கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குறிச்சியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் பெயிண்டரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கண வருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்து அறிவுரை வழங்கினார்.

    ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாத இளம்பெண் பெயிண்டரு டனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் அறையில் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தனது கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றதையும் பார்த்தார்.

    பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு ரூ.40 ஆயிரம் பணத்துடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 1½ வருடங்களுக்கு திருமணம் நடந்தது. 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    திருமணத்துக்கு முன்பே இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு மணமகனை பார்த்து மகளுக்கு திருமணம் செய்தனர்.

    ஆனால் இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து பேசி பழகி வந்தார். மேலும் அவர் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கைக்குழந்தையை தூக்கி கொண்டு கள்ளக்கா தலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கைக்குழந்முதையுடன் முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவரின் பழக்கம் கிடைத்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வழக்கம் போல இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் உணவு சாப்பிடுவதற்காக சென்ற அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வேலைக்கு வராததால் மேலாளர் இது குறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் மகளை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×