என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
- இளம்பெண் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டார்.
- கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை குறிச்சியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் பெயிண்டரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கண வருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்து அறிவுரை வழங்கினார்.
ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாத இளம்பெண் பெயிண்டரு டனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் அறையில் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தனது கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றதையும் பார்த்தார்.
பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு ரூ.40 ஆயிரம் பணத்துடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்