search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தராபுரம் அருகே 3 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
    X

    சுந்தராபுரம் அருகே 3 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

    • கட்டிட தொழிலாளியின் மனைவி தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உள்ள ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • 3 குழந்தைகளும் பாட்னாவில் உள்ள கட்டிட தொழிலாளியின் தாயார் வீட்டில் இருந்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 27 வயது வாலிபர். கட்டிட தொழிலாளி. இவர் தனது 26 வயது மனைவியுடன் கோவை சுந்தராபுரம் இந்திரா நகரில் வசித்து வந்தார்.

    அந்த கட்டிட தொழிலாளியின் மனைவி சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகளும் பாட்னாவில் உள்ள கட்டிட தொழிலாளியின் தாயார் வீட்டில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கட்டிட தொழிலாளியின் மனைவி தான் வேலை செய்து வரும் நிறுவனத்தில் உள்ள ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் கட்டிட தொழிலாளிக்கு தெரியவந்தது. இதனை அவர் கண்டித்து வந்தார். ஆனால் அவரது மனைவி அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கட்டிட தொழிலாளி தூங்குவதற்கு சென்றார். பின்னர் அதிகாலை கண்விழித்து பார்த்த போது அருகில் இருந்த அவரது மனைவி காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே வந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அப்போது தான் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கட்டிட தொழிலாளி போத்தனூர் போலீஸ் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து மாயமான 3 குழந்தைகளின் தாயாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×