என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்
- கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.
- கணவர் தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள தென்செங்கம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இளம்பெண் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
தனது கைக்குழந்தையுடன் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு செல்லும் இளம்பெண் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இளம் பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.
பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். தனது மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் குழந்தையுடன் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்