என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கண்ணை மறைத்த ஓரின காமம்- 3 குழந்தைகளின் தாயுடன் இளம்பெண் மீண்டும் ஓட்டம்
- செல்வி தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட பொம்மியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது.
- 2 பெண்களின் கண்ணை மறைத்த ஓரின காமம் இரு வீட்டினரையும் கலங்கவைத்துள்ளது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளியின் மனைவி பொம்மி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை .
இவரது பக்கத்து வீட்டில் செல்வி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். செல்விக்கு 30 வயது ஆகிறது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தொடக்கத்தில் பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் பொம்மிக்கும், செல்விக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
இருவரது கணவர்களும் வேலைக்கு சென்ற சமயங்களில் செல்வியின் வீட்டுக்கு சென்று பொம்மி பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இருவரும் தங்கள் குடும்ப பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதும், கொஞ்சி கொஞ்சி பேசுவதுமாக இருந்தனர். நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகமானது.
பெண்கள் தானே பழகுகிறார்கள் என்று அவர்களது கணவன்மார் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சூழலில் செல்வி வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். அவருடன் பொம்மியும் வேலைக்கு போக தொடங்கினார்.
செல்வி தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட பொம்மியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது. இருவரின் அதிகப்படியான அன்பு நாளடைவில் லெஸ்பியன் உறவாக மாறியது. அடிக்கடி ஊர் ஊராக சுற்றியும் அவர்கள் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவரம் மெல்ல இருவரது கணவர்களுக்கும் தெரியவந்தது. இருவீட்டிலும் மனைவியை கண்டித்தனர். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் செல்வியின் கணவர் வீட்டை காலி செய்து விட்டு திம்மநாயக்கன்பட்டிக்கு குடி பெயர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி பொம்மி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர் பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை . அப்போது வீட்டில் படுக்கை அறையில் பொம்மி கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அதனுடன் தாலியும் இருந்தது.
கடிதத்தில் எனக்கு கணவருடன் வாழ பிடிக்க வில்லை. அதனால் தான் தாலியை கழட்டி வைத்திருக்கிறேன். நான் எனக்கு பிடித்த செல்வியுடன் செல்கிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தை கூறி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து பொம்மியை தேடி வந்தார். அதேவேளையில் செல்வியையும் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவரது கணவரும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் மாயமான 2 பேரையும் தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவும், ஏற்கனவே ஒரு முறை அவர்கள் ஊரைவிட்டு ஓடியதும் தெரியவந்தது. இரு வீட்டாரும் அவர்களை அழைத்துவந்து அறிவுரைகள் கூறினர்.
செல்வியின் வீட்டில் அவருக்கு புத்திமதி கூறியதோடு 3 குழந்தைகள் எதிர்காலம் கருதி நடந்து கொள் என்று கண்டித்தனர். இந்த சூழலில்தான் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு ஓட்டம் பிடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து அவர்களது செல்போன் எண்களை வைத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். விரைவில் அவர்கள் எங்கிருந்தாலும் மீட்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் தங்களது தாயை காணாமல் செல்வியில் 3 குழந்தைகளும் கதறி அழுதபடி தவித்து வருகிறார்கள். 2 பெண்களின் கண்ணை மறைத்த ஓரின காமம் இரு வீட்டினரையும் கலங்கவைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்