search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் பாலகம்"

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
    • ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ வழியே மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் ,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரியையும், 94450 29552,தொலைபேசிஎண்: 0421-2971112 ஆகிய செல்போன்-தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் வளர்மதி வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்வைப்பு தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்யவும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைப்ப தற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, வருகிற 21-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவ லகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார்.
    • ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் அர்த்தனாரி தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நான் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறேன். சேலம் தி.மு.க. பிரமுகரின் மகன் சேலம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை.

    மேலும் அங்கு வேறு ஒருவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்.

    இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தி.மு.க பிரமுகரின் மகனிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆவின் பாலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
    • ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்மு தல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வரு வாய் ஈட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும்,18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக இணையதள முகவரி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என இதில் அவர் இவ்வாறு கூறினார்.

    • நகரின் பல பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சாக்கடை கழிவு வெளி யேறி மழைநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் அவதிப்பட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரியில் நேற்று இரவு இடி,மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் நகரின் பல பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தருமபுரியில் கடந்த சில தினங்களாக சாக்கடை கழிவுகளை அகற்றி வருகின்றனர்.மழையால் அந்த பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நகரின் முக்கிய சாலையான கிருஷ்ண கிரியில் இருந்துதருமபுரி வரும் சாலையில் உள்ள ஆவின் பாலகம், மற்றும் தருமபுரி பட்டுக்கூடு அங்காடி உள்ள பகுதி முழுவதுமாக நீரில் மிதந்தது. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு வெளி யேறி மழைநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் அவதிப்பட்டனர். ஆயிரக்கணக்காக மக்கள் தினசரி வந்து செல்லும் இப்பகுதியில் சாக்கடை கழிவுநீருக்குள் அசூசையுடன் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    • ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர்


    அரியலூர்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திட மின் வாகனம் (இ-வெகிக்கில்ஸ்), உறைவிப்பான் (பிரீசர்), குளிர்விப்பான் (கூலர்) போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது. ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகைக் கட்டிடம் இருக்கலாம். அதற்கான ஆராரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாதரர்களின் சாதி சான்று, வருமானம் சான்று, குடும்ப அட்டை. இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜி.எஸ்.டி.ஐ.என். உடன் கூடிய விலைப்புள்ளி மற்றும் இத்திட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ஆவணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 225, இரண்டாவது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கூடுதல் விவரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்."

    • பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    • சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா (வயது 45). இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்டு அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார்.

    2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    பிரபா என்கிற சந்தியா மனம் திருந்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தார். அவர் வேலூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    சந்தியா தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அவருக்கு ஆவின் நிர்வாகம் மூலம் வேலூர் மாவட்டம், அரியூர், முருக்கேரி ஸ்ரீ சாய் வசந்தம் கிரக இல்லத்திற்கு எதிரே மாநில நெடுஞ்சாலையில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது.

    ஆவின் பாலகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வரவேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், மற்றும் சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மனம் திருந்தி வரும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் கியூ பிரான்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், தீபா சத்யன், பாலகிருஷ்ணன் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் ஆவின் பாலகம் உணவகமாக மாறியது.
    • அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை சாலையில் ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வடை மற்றும் பூரி போன்ற உணவுகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் பாலகங்களில் பால் பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களும் நஷ்டத்சதை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பாலகங்களை உணவகமாக மாறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×