search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt Help"

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
    • ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ வழியே மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

    100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் ,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

    200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரியையும், 94450 29552,தொலைபேசிஎண்: 0421-2971112 ஆகிய செல்போன்-தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பள்ளபாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, 60பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு உரியது. விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும் எண்ணெய் ஆலை மட்டுமில்லாமல் தொழிற்சாலை நடத்தக்கூடிய அளவில் வளர வேண்டும் என எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    விவசாயத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த சங்கம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.அரசு நடத்தக்கூடிய சங்கத்தின் மூலமாக பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கடலை பருப்புகளை கொள்முதல் செய்து அரைத்து சுத்தமான எண்ணெய் எடுத்துவெளிபகுதி மக்களை கவரக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தின் கீழ் 394 நபர்களுக்கு ரூ.190.56 லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 8 குழுக்களுக்கு 80 நபர்களுக்கு ரூ.4.68 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து, 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் கடனுதவியையும், 29 நபர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவிகளையும், 6நபர்களுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    விழாவில் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×