search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் நண்பர்"

    • கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
    • அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததால் ஆண் நண்பர் மீது ஆத்திரம்.

    காதலன் காதலியுடன் செல்லும்போது எதேச்சையாக மற்ற பெண்களை பார்ப்பது உண்டு. சிலர் வேண்டுமென்றே பார்ப்பதும் உண்டு. அந்த நேரத்தில் காதலி காதலனை பார்க்கும் ஒரு முறைப்பை நாம் சினிமா படங்களில் பார்த்திருப்போம். சில சமயங்களில் இதுபோன்ற சம்பவத்தால் அடிதடியும் நடப்பது உண்டு.

    இப்படி ஆண் நண்பர் ஒருவர் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ள்ளார்.

    மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த அந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.

    போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

    • டைட் ஜீன்ஸ்-டீ சர்ட் அணிந்தார்-இரவில் சாட்டிங் செய்தார்
    • 11 பக்க கடிதம்-வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெபபிரின்ஸா (வயது 32).

    இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் எபனேசரை காதலித்து பெற்றோர் எதிர்பையும் மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தை களுடன் ஜெபபிரின்ஸா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு எபனேசர் வந்துள்ளார். பின்னர் அவர் ஜெபபிரின்சாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். மூலச்சல் ஆற்றின் கரை யோரம் சாலையில் அவர்கள் சென்ற போது 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த எபனேசர் தான் மறைத்து வைத்திருந்த அரி வாளால் மனைவி ஜெப பிரின்சாவை தலையில் வெட்டினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    காதல் மனைவியை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார், எபனேசரை தேடியபோது, அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில் மனைவியின் நடவடிக்கை சரியில்லாததே கொலைக்கான காரணம் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவியை கொலை செய்யும் முன்பு எபனேசர் வெளியிட்ட 11 பக்க கடிதம் மற்றும் ஜெபபிரின்சா குறித்த வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனக்கு தெரியாமல் திரு வனந்தபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர ஊழியராக பணியாற்றிய தோடு பியூட்டிசியன் படிப்பும் ஜெப பிரின்சா படித்து வந்ததாக அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் கைதான எபனேசர் போலீசரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெப பிரின்சா எனக்குத் தெரியாமல் திருவனந்த புரத்தில் அழகு கலை படிப்பு படித்த போது அங்கு சில ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். மேலும் தினமும் அதிக அளவிலான மேக்கப்,டைட் ஜீன்ஸ், டீசர்ட் அணிவது என விரும்பதகாத செயலில் ஈடுபட்டார்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும் அவர் ஆண் நண்பர்களுடன் பீச், பார்க் என டேட்டிங் செல்வதோடு இரவு தாமதமாக வீடு திரும்பினார். இரவு வீட்டிற்கு வந்த பின்பும் தனி அறையில் இருக்கும் அவர் தனது அந்தரங்க புகைப்படங்களை ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டார். என்னை படுக்கை அறையில் அனுமதிக்காததால் சந்தேகமடைந்து, அவரது செல்போனை ரகசியமாக எடுத்து பார்த்த போது தான் மேற்கண்ட விஷயங்கள் தெரியவந்தது.

    ஆண் நண்பர்களுடன் ஜெபபிரின்சா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த நான் அவரை கண்டித்தேன். இருப்பினும் அவர் ஆண் நண்பர்களுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட தகராறில் ஜெபபிரின்சா அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். எனவே அவரை கொலை செய்யும் நோக்கத்தில் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு அங்கு சென்றேன். ஜெபபிரின்சாவிடம் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தேன்.

    பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன். நானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×