search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதிப்பேரணி"

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
    • மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    மதுரை

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு.
    • காலை 9.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாளை 7-ந் தேதி காலை 9 மணியளவில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஆட்சியில் இருந்த நேரங்களில் பல உன்னத சட்டதிட்டங்களை நிலை நாட்டிய தமிழினத் தலைவர், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் மீது கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    கலைஞரின் நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஏற்பாடு செய்திட வேண்டும்.மேலும் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நாளை காலை 9.30 மணி அளவில் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×