search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "White Report"

    • எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

    மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெளியிட்டு இருப்பது வெள்ளை அறிக்கை அல்ல. வெள்ளை-பொய் அறிக்கை. அதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

    முந்தைய அரசை குற்றம்சாட்டவும், தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், மாபெரும் தோல்விகள், ஏழைகளுக்கு செய்த துரோகம் ஆகியவற்றை மறைக்கவும் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைதான் இந்த அறிக்கை.

    கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சியாக இருந்தால், 2004-ம் ஆண்டு தொடங்கி, 2014-ம் ஆண்டுடன் முடித்திருக்கக்கூடாது.

    இதற்கு சரியான பதில், காங்கிரஸ் வெளியிட்ட '10 ஆண்டு அநீதி காலம்' அறிக்கை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெள்ளை அறிக்கையில், வேலையின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம் ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    சீனாவுடனான எல்லை பிரச்சினை, எல்லையில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். நாங்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள், மோடியின் 2 நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கருப்பு பண மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முக்கொம்பு அணை உடைப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #MukkombuDam
    நெல்லை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டப் படிப்பில் பகுதி நேர ஆய்வாளராக சேர்ந்து ஆய்வுகளை செய்து வந்தார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு 180 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்தை தழுவினர். அது தொடர்பாக ஆய்வு நடத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். அதற்கான வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த வாய்மொழித் தேர்வை திருமாவளன் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

    முன்னதாக திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முக்கொம்பு அணை உடைபட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அளவில் விடுதலை சிறுத்தை கட்சி வருகிற ஆகஸ்ட் 31‍-ந் தேதிவரை பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எங்கள் கட்சி சார்பில் கேரள மக்களுக்கு 10 லட்சம் நிதி, 15 லட்சத்தில் நிவாரண பொருட்களும் 2 நாட்களில் வழங்க இருக்கிறோம். கேரளாவிற்கு மத்திய அரசு வழங்கி உள்ள நிதி போதாது.

    கேரள முதல்வர் கேட்டுக் கொண்டபடி ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரபு நாடு தொகையை வாங்க கூடாது என்பது தவறானது. மதவாத அடிப்படையில் அணுகாமல் மனிதநேய அடிப்படையில் மத்திய அரசு அணுக வேண்டும். அனைத்து கட்சி தலைவராலும் மதிக்க கூடிய முதுபெரும் தலைவர் கலைஞர். அவரது இறப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த அடிப்படையில் இரங்கல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். தி.மு.க. தரப்பில் அ.தி.மு.க.வை அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் தவறில்லை.



    தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவ‌து வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MukkombuDam

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #minister #Vijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இறுதியாக, தி.மு.க. உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    ஐ.பி.செந்தில்குமார்:- மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. இதை தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர வேண்டும். தொலைநோக்கு திட்டம்-2023-ல் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நகர்புறங்களில் 15 நிமிடத்திலும், புறநகர் பகுதிகளில் 30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும் நிலை உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- மெட்ரோ நகரமான சென்னையில் தற்போது 8.32 நிமிடம் என்ற அளவில் இந்த விகிதாச்சாரம் குறைந்துள்ளது. புறநகர் பகுதியிலும் கடந்த ஆண்டு 16 நிமிடங்கள் என்ற நிலை தற்போது 13 நிமிடங்களாக குறைந்துள்ளது.

    ஐ.பி.செந்தில்குமார்:- 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதல் சுகாதாரத் துறையில் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் கொண்டுவந்தது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    ஐ.பி.செந்தில்குமார்:- ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரம் 12 மணியாக உள்ளது. அதை 8 மணி நேரமாக குறைத்து, 3 ஷிப்டுகள் முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு நடக்கிறது. அந்த தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர்?, தேர்வுக்கு முன்பாக இருந்த நிலை என்ன?.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 4,500 உள்ளது. இதில், மத்திய அரசின் ஒதுக்கீடு 50 சதவீதம் போக, மீதமுள்ள 50 சதவீதமும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது.

    ஐ.பி.செந்தில்குமார்:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதிய மாணவர்களுக்கு 69 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்படி அந்த மாணவர்களால் தேர்ச்சி பெற முடியும். மேலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 63 ஆயிரம் உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.

    அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டுதான் ‘நீட்’ தேர்வை சந்திக்கும் நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும், ‘நீட்’ தேர்வுக்கு அரசே பயிற்சி அளித்திருக்கிறதா?.

    ஐ.பி.செந்தில்குமார்:- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தேவைப்பட்டால், இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாராக உள்ளது. தேவையில்லாமல், உறுப்பு கொடையாளிகளின் குடும்பத்தினரையும், மருத்துவ நிபுணர்களையும் காயப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #minister #Vijayabaskar
    ×