என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மோடி அரசு வெளியிட்டது பொய் அறிக்கை - ப.சிதம்பரம்
- எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
- கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.
புதுடெல்லி:
மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு வெளியிட்டு இருப்பது வெள்ளை அறிக்கை அல்ல. வெள்ளை-பொய் அறிக்கை. அதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
முந்தைய அரசை குற்றம்சாட்டவும், தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், மாபெரும் தோல்விகள், ஏழைகளுக்கு செய்த துரோகம் ஆகியவற்றை மறைக்கவும் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைதான் இந்த அறிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சியாக இருந்தால், 2004-ம் ஆண்டு தொடங்கி, 2014-ம் ஆண்டுடன் முடித்திருக்கக்கூடாது.
இதற்கு சரியான பதில், காங்கிரஸ் வெளியிட்ட '10 ஆண்டு அநீதி காலம்' அறிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வெள்ளை அறிக்கையில், வேலையின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம் ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சீனாவுடனான எல்லை பிரச்சினை, எல்லையில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். நாங்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், மோடியின் 2 நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கருப்பு பண மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்