search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water inflow increase"

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. #PeriyarDam #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.

    கோப்புப்படம்

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.

    56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது. நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.

    அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #PeriyarDam #VaigaiDam
    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #KeralaRain #MullaPeriyar #VaigaiDam
    கூடலூர்:

    கேரளாவில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கன மழைக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 134.40 அடியாக உள்ளது.

    எனவே இந்த முறையாவது 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்குபோக வைகை அணையை வந்தடைகிறது.

    மேலும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 59. 51 அடியாக உயர்ந்துள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று 1596 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 2465 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.8, தேக்கடி 12.4, கூடலூர் 14.3, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 10.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #KeralaRain #MullaPeriyar #VaigaiDam 
    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை குறைந்ததால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டம் 117 அடியானது.

    இந்த நிலையில் கேரளாவில் வயநாடு மற்றும் கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை அந்த அணைக்கு 37 ஆயிரத்து 456 கன அடி தண்ணீர் வந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 83.66 அடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 50 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 4 ஆயிரத்து 550 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 54 ஆயிரத்து 550 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் இன்று இரவு ஒகேனக்கலை கடந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குடகு மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 9 ஆயிரத்து 898 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 8 ஆயிரத்து 311 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து நேற்று 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 19 ஆயிரத்து 341 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    அணையில் இருந்து தண்ணீர் திறப்பை விட அணைக்கு குறைவாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 118.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 117.5 அடியாக இருந்தது.

    இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும் என்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவதால் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும் என கூறப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து கடந்த 19-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு திறக்கப்பட்டது.

    கீழணையில் இருந்து நேற்று முன்தினம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை அது 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனால் வீராணம் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும் என கூறப்படுகிறது.

    வீராணம் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.  #VeeranamLake
    பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 136.95 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 31.82 கன அடி நீர் வருகிறது. 2,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. #PeriyarDam
    கூடலூர்:

    தேனி அருகே கேரள எல்லைப் பகுதியான லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. 155 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த சில வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை வெளுத்து கட்டி வருவதால் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 136.95 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 31.82 கன அடி நீர் வருகிறது. 2,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது.

    இதனால் வைகை அணை நீர் மட்டம் இன்று 54.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். அணை நிரம்பும் பட்சத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களுக்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டு ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு திறக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 41.95 அடியாக உள்ளது அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 120.5 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பெரியாறு 6.2, தேக்கடி 4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 1. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #PeriyarDam
    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #KeralaRain #MullaPeriyar #VaigaiDam
    கூடலூர்:

    கேரளாவில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கன மழைக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 134.40 அடியாக உள்ளது.

    எனவே இந்த முறையாவது 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்குபோக வைகை அணையை வந்தடைகிறது.


    மேலும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 59. 51 அடியாக உயர்ந்துள்ளது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று 1596 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 2465 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 24.8, தேக்கடி 12.4, கூடலூர் 14.3, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 10.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #KeralaRain #MullaPeriyar #VaigaiDam
    ×