search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Undiyal"

    • சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
    • 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும்.

    இம்மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவல் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, அறநிலையத்துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் சித்ரா, மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்கா வலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, தங்க மணி, மருதமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 24 ஆயிரத்து 881 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில் 25 லட்சத்து 15 ஆயிரத்து 485 ரூபாயும் இருந்தது. மேலும் 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.
    • தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழா கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.

    தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.18லட்சத்து 95ஆயிரத்து 289 பணமும், 16 கிராம் தங்கமும், 215 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் நம்பி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் பால கிருஷ்ணன், ஈஸ்வரன், இசக்கி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார ப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உலோகங்கள் தங்கம் 1 கிலோ 900 கிராம், வெள்ளி 29 கிலோ, பித்தளை 30 கிலோ , செம்பு 10 கிலோ, தகரம் 3.5 கிலோ மற்றும் அயல் நோட்டு 552-ம் இருந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஜூலை மாத உண்டியில் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார ப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 2 கோடியே 90 லட்சத்தி 30 ஆயிரத்து 175-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 13 ஆயிரத்து 621, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 91 ஆயிரத்து 790, அன்னதானம் உண்டியல் மூலம் ரூ. 18 லட்சத்து 21 ஆயிரத்து 342, மேலக்கோவில் உண்டியலில் ரூ. 14 ஆயிரத்து 944-ம் சேர்த்து மொத்தம் ரூ. 3கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 872 கிடைத்தது. இது போக உலோகங்கள் தங்கம் 1 கிலோ 900 கிராம், வெள்ளி 29 கிலோ, பித்தளை 30 கிலோ , செம்பு 10 கிலோ, தகரம் 3.5 கிலோ மற்றும் அயல் நோட்டு 552-ம் இருந்தது.

    உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவி யாளர் செந்தமிழ் பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வா ளர் செந்தில் நாயகி, தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர்கள், பொதுமக்கள் பிரதிநிதி யாக வேலா ண்டி,கருப்பன், மோகன் அயல் பணி மற்றும் திருக்கோ யில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் புது அம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதையொட்டி மண்டல பூஜையும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா நாங்குநேரி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த பெருமாள் (வயது 63) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • வழக்கமாக உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற னர்.

    உண்டியல் எண்ணும் பணி

    நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களை அவ்வப்போது திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த டிசம்பர் 13-ந்தேதி உண்டியல்கள் எண்ணப் பட்டது.

    இந்நிலையில் இன்று கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றினர்.

    கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியா ளர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். வழக்கமாக கோவில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

    தற்போது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினர் பங்கேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

    ×