search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
    X

    உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

    • கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.
    • தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழா கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.

    தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.18லட்சத்து 95ஆயிரத்து 289 பணமும், 16 கிராம் தங்கமும், 215 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் நம்பி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் பால கிருஷ்ணன், ஈஸ்வரன், இசக்கி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×