search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi constituency"

    • எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது.
    • அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார்.

    தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.

    அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.

    புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது அதிமுகவா? திமுகவா?

    நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் தேவையில்லை.எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது. தமிழக மக்களுக்கான திட்டங்கள், நிதிகளை பெறுவோம்.

    மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

    தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி. 2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கல்லை காண்பித்தார். அப்போது, மோடியுடன் நான் இருக்கும் படத்தை காண்பித்து பல் தான் தெரிகிறது என்று கூறினார்.

    சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்றும் மக்களுக்கு பின்னால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம் என்றும் கனிமொழி எம்.பி.பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன். இங்கு மிக முக்கியமாக இருக்கக் கூடியது தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சனைகள் பல உள்ளன.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். இந்த முறையாவது மகளிர் மசோதாவை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்தி விநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ண ராஜபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குரூஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், 2-ம் கேட், சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    எத்தனையோ எதிர்ப்புகள், அச்சுறுத்துதல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை தி.மு.க கூட்டணிக்கு தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் தனித்துவமான வெற்றியை பெற்று உள்ளது. தமிழகத்தில் சுமூகமான சூழ்நிலையை, நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.

    ஆனால் அவர்கள் தோல்வியடைந்த பின்பும் மக்களை மிரட்டுகின்றனர். என்னுடைய தோல்விக்காக வருத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் அவர்கள் ஏற்படுத்திட முடியாது. மக்களுக்கு பின்னால் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    தூத்துக்குடி தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிட்டனர்.

    தொகுதியில் மொத்தம் 14,25,401 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,77,393 ஆண் வாக்காளர்களும், 5,06,578 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 28 பேர் என மொத்தம் 9,83,999 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இது 69.03 சதவீத வாக்குப்பதிவாகும்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முதலில் தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 3 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்து வந்தார்.
    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #LokSabhaElections2019 #BJP #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

    வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ருசிகரமாக பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.



    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர் எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் எடக்குமடக்காக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    தூத்துக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை.

    கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- கலைஞர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறீர்களே?

    பதில்:- கலைஞர் இல்லை என்பது எல்லோருக்குமே பாதிப்புதான். தனிப்பட்ட முறையில் தந்தை என்கிற வகையில் எனக்கு பெரிய வலியையும், வருத்தத்தையும உருவாக்கி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவராக கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக எனக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.



    கே:- தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறதே?

    ப:- இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பா.ஜனதா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் சந்திக்கலாம்.

    கே:- தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா?

    ப:- பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    ×