search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu weatherman"

    வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TNRains #TamilNaduWeatherman #RedAlert
    சென்னை:

    தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

    கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.

    சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.

    சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.


    தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.

    நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் காற்று வீசக்கூடும்.

    தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும். டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #TamilNaduWeatherman #RedAlert
    வத்தலக்குண்டு அருகே கனமழையால் வீடு இடிந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 4 பேர் தங்களது வளர்ப்பு பூனையால் உயிர் தப்பியுள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர்தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலகோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது48). இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகின்றனர். சம்பத்தன்று குடும்பத்துடன் கோவிந்தன் வீட்டில் தூங்கிக்கொண்டிந்தார்.

    அப்போது அதிகாலை 5 மணியளவில் வளர்ப்பு பூனை வழக்கத்திற்கு மாறாக சத்தம்போட்டது. இதனால் கோவிந்தன் குடும்பத்தினர் என்னவோ ஏதோ என்று பதறியபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    பூனை சத்தம் போட்டு வெளியே வந்ததால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அதிர்ச்சியில் இருந்து மீளாத 4 பேரும் வளர்ப்பு பூனையை கண்டு கண்கலங்கினர். இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கையில், பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களின் நியூரான்களை விட ஒலி அளவுகளை விரைவாக உணரும் தன்மை உடையது.

    இதனாலேயே பூனைக்கு ஆபத்து ஏற்படும் உணர்வு ஏற்பட்டதால் அதிக சத்தம்போட்டு தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ளது என்றனர்.

    2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TamilNaduWeatherman #Rain
    சென்னை:

    தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இதுகுறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7-ந் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 204.5 மி.மீட்டர் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால் அது கிழக்கு பகுதியில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதனால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தி மலைப்பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக இருக்கிறது. அது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்பதால் கேரளா, தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம்.

    இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தேவை இல்லை. குறிப்பாக சென்னைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. எனவே 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduWeatherman #Rain
    ×