என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special bus"

    • தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
    • பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர்ந்து கோவை-ஊட்டி இடையே மேலும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவது என்று கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்து உள்ளது.

    இதுதொடர்பாக கோவை போக்குவரத்துக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து ஊட்டிக்கு தினமும் இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன், மேலும் கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகம் இருந்தால் மேலும் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • சென்னையில் இருந்து 10,750 பஸ்கள் விடப்படுகிறது.
    • பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வருடம் 15-ந்தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 விடுமுறை நாட்களுடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை சேர்ந்து வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் போக்குவரத்து முதன்மை செயலாளர் கோபால், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விட திட்டமிடப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 17 ஆயிரம் பஸ்களும் சென்னையில் இருந்து 11 ஆயிரம் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்படுகிறது.

    இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகி றது.

    இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்கள் சேலம், கோவை நகரங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு செல் லும். மற்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்படுகிறது.

    • ஆயுத பூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகையை வியாபாரிகளும், தொழிலாளர்களும் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடுவது வழக்கம். வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜை என்பதால் அரசு விடுமுறையாகும். மறுநாள் சனிக்கிழமை விஜயதசமியும் அதனை தொடர்ந்து 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையும் வருவதால் 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது.

    தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து நாளையும் மறுநாள் வியாழக்கிழமையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 2092 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். நாளை (புதன்கிழமை) அவற்றுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் மேற்கொள்வதால் அன்று 2000 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை பயணத்திற்கு 13 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 10-ந் தேதி பயணம் செய்ய மொத்தம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    364 அரசு விரைவு பஸ்களுக்கும் 40 பிற போக்குவரத்துக் கழக பஸ்களுக்கும் முன்பதிவு நடக்கிறது. நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.
    • பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 12,846 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து துறை 28-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கியது. சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு இன்று முதல் அவரவர் ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த முன்பதிவு இதுவரை இலலாத ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    • 2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி சந்தனகூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிறு) முதல் 12-ந்தேதி வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் நாகூர் மற்றும் காரைக்கால் நாகூர் வழித்தடத்திலும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்ட பஸ் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பஸ்கள் வாயிலாக 335 நடைகளுடன் 2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பஸ் நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
    • இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கார்த்திகை தீபம் 12-ந்தேதியும் பவுர்ணமி 14-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 பஸ்களும், சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து 8127 பஸ்களும் என மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.

    தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstcofficial app. ஆகிய இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகையை யொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து 15, 16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங் கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து 15, 16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கலை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக 17-ந்தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்படு வதால் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்க ளில் இருந்து மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.




     


    சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொங்கல் திருநாளை யொட்டி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப் படும் 8368 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5736 என மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு 2092 பஸ்கள் இயக்கப்படும். இவற்றுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக விடப்படும். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பஸ் முனையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் மற்ற ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மற்றும் ஊத்துக் கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலைக்கு குறிப்பிட்ட பஸ் கள் இயக்கப்படும். மற்ற அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 10,460 வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5,340 சேர்த்து மொத்தம் 15,800 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

     

    ×