என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"
- தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைகிறது.
திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் பஸ்நிலையம் முன்பு குளம்போல் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய் புதிதாக அமைத்த பின்னர் பஸ்நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் இணைப்புச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் முடியாததால் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பஸ்நிலையம் அருகே மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதித்து உள்ளனர். ஏற்கனவே பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. மீதி உள்ள பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எனினும் கிளாம்பாக்கம் பஸ்நிலைய முகப்பில் ஜி.எஸ்.டி.சாலையில் குறுக்காக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி 90 சதவீதம் மட்டுமே முடிந்து உள்ளன. இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து பின்புறம் உள்ள அய்யஞ்சேரி வழியாக பஸ் வெளியேறி ஊரப்பாக்கம் வழியாக வரும் பாதையும் குறுகலாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பஸ்நிலையம் முன்பு கால்வாய் அமைக்கும் பணி இன்னும் 10 சதவீதம் மட்டுமே முடிக்க வேண்டும். இது விரைவில் முடிக்கப்படும். அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்)15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருகிறோம். அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னையில் இருந்து 10,750 பஸ்கள் விடப்படுகிறது.
- பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வருடம் 15-ந்தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 விடுமுறை நாட்களுடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை சேர்ந்து வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையடுத்து வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் போக்குவரத்து முதன்மை செயலாளர் கோபால், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விட திட்டமிடப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 17 ஆயிரம் பஸ்களும் சென்னையில் இருந்து 11 ஆயிரம் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்படுகிறது.
இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகி றது.
இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்கள் சேலம், கோவை நகரங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு செல் லும். மற்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்படுகிறது.
- கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
- டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கந்தசாமி அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இன்று கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதையொட்டி அங்கு டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
- சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் 14-ந் தேதி வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து கழகங்களை சார்ந்த பேருந்துகளுக்கு முன்பதிவு நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.25 லட்சம் பேர் இந்த ஆண்டு முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்குகின்றனர்.
பிற நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் முன்பதிவு செய்துள்ளனர்.






