என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்ட கோவிலில் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு
- கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
- டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கந்தசாமி அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இன்று கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதையொட்டி அங்கு டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






