என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water truck"

    • விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலியாகினர்.

    சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது மோதியது.

    இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவி என்ற பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், ஓட்டுநர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

    விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
    • இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது. டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.

    இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்தவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

    • போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மெய்யிரை (வயது39). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நள்ளிரவு 1மணி அளவில் வேனில் மெட்ரோ ரெயில் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அண்ணா நகர் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ரோகிணி தியேட்டர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கு பழுதாகி நின்று கொண்டு இருந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் மெய்யிரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த மெட்ரோ ரெயில் ஊழியர்களான பாலசந்திரன், ரமணா இருவரும் லேசான காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மெய்யிரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பழுதடைந்த தண்ணீர் லாரி எந்தவொரு சமிக்கை விளக்குகளும் எரியவிடாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது.
    • மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

    தாம்பரம்:

    பல்லாவரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நாகம்மாள்(வயது48).

    கணவன்-மனைவி இருவரும் திருமுடிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் படுத்து இருந்த மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் சரிந்தது. இதில் சின்னையாவும், அவரது மனைவி நாகம்மாளும் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் நாகம்மாள் சிக்கிக்கொண்டார். இதில் அவரது தலை துண்டாகி தனியாக வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்பு நாகம்மாள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட கணவர் சின்னையா கதறி துடித்தார். மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் சாலையோரங்களில் அடிக்கடி மாடுகள் படுத்து கிடப்பதும், சுற்றுவதும் அதிக அளவில் உள்ளது. இது பற்றி வாகன ஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்த சாலையில் குறுக்கே செல்லும் மாடுகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனை தடுக்க தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற விபத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தண்ணீர் லாரி மோதி 2 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது பரிதாபமாக பலியானான்.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து குமாரவேல் (வயது32) இவரது மனைவி இந்திரா.இவர்களுக்கு 3 வயதில் ஜோதீஸ்வரி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் சோலை ராஜா என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

    இன்று மதியம் இரண்டு குழந்தைகளும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி தண்ணீர் லாரி அங்கு விளையாடிக் கொண்டி ருந்த சோலை ராஜா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவன் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தான். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சோலைராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    வீட்டு வாசலில் தண்ணீர் லாரி மோதி ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதை பார்த்துதாய் இந்திரா கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. 

    இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி தண்ணீர் லாரியை ஓட்டி வந்த வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (17 ) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லைசென்ஸ் வாங்காத சிறுவனை வைத்து தண்ணீர் வாகனத்தை இயக்கிய வாகன உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் மேட்ட மலை பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.
    ×