search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைரேன் சிங்"

    • தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அளித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
    • தற்போது நிதிஷ் குமார் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக-வுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் கட்சி பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.

    மணிப்பூரில் நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ பதவிதான் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. ஆதரவை இழந்த போதிலும் பைரேன் சிங் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    மத்தியிலும், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-வின் முக்கிய கூட்டணி கட்சியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விளங்கி வருகிறது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். மத்தியில் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

    மேகாலயா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அதரவு அளித்திருந்த நிலையில், அதை திரும்பப் பெற்றது. இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐந்து எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 60 இடங்களை கொண்ட பாஜக-வுக்கு 37 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.-க்கள், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கடசியின் மணிப்பூர் மாநில தலைவர்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் நிதிஷ் குமார்.

    • மணிப்பூரில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    • மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல் மந்திரி பைரேன் சிங்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி-மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரத்தில் 250 பேர் பலியாகினர். இன்னும் அப்பகுதியில் கலவரம் ஓயவில்லை.

    கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல் மந்திரி பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியது.

    இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் சேதமடைந்தன.

    இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    • மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
    • இதையடுத்து, பிரதமர் ஏன் மணிப்பூர் சென்று மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். மணிப்பூர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த 3-4 மாதமாக அமைதியை நோக்கி மாநிலம் முன்னேறி வருகிறது. வரும் புத்தாண்டில் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன். மணிப்பூர் மக்கள் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே மாநிலத்திற்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

    • முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.

    இம்பால்:

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.

    பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன்.

    நாம் இப்போது கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். அமைதியான மணிப்பூர், வளமான மணிப்பூர் காண நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என மாநிலத்தின் அனைத்து சமூகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    கடந்த 2023 மே முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 345 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகின.

    இந்த ஆண்டு மே முதல் இதுவரை 112 துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

    கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,511 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,047 எப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
    • 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

    இம்பால் :

    மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த முகாம்களை மாநில முதல்-மந்திரி பைரேன் சிங் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும்வரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது. இதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அதற்கான தளவாடங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.

    இந்த தளவாடங்கள் 2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும் எனக்கூறிய அவர், இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து பைரேன் சிங் கூறுகையில், 'வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன், தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

    ×