என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில கல்விக் கொள்கை"

    • பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம்.
    • தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார்.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நமக்கு கல்வி உரிமை தடுக்கப்பட்டது. அப்படி தடுக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக உருவாகுன இயக்கம் தான் திராவிட இயக்கம். அப்படி போராடி பெற்ற கல்வியை எப்படியாவது பறிக்கலாம் என்று அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சூழ்ச்சிகளை பலர் செய்துக்கொண்டே வருகிறார்கள்.

    இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குல கல்வி திட்டம், மும்மொழிக் கொள்கை, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு என பல வழிகளில் நம்முடைய கல்வி உரிமையை சிதைக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்து தான் நாம் (தமிழ்நாடு) இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். குல கல்வி திட்டம் என்று ஒன்று வந்தது. மாணவர்கள் பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம். அந்த திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதன்பிறகு தான் அந்த குலகல்வி திட்டம் தமிழ்நாட்டில் இருந்து ஒழிந்தது.

    இப்போது புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற அந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களுடைய கல்விக்கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என்று நாங்கள் தனியா கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று தைரியமா, துணிச்சலா சொன்னவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்வி கொள்கை. தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார். மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2600 கோடியை தருவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள். 2000 ஆயிரம் இல்ல நீங்க 10,000 கோடி தந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தைரியமாக சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதை கட்டாயப்படுத்தி திணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் வரலாறு என்றார். 

    • ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது.
    • மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக புகார்

    சென்னை:

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகுவதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
    • பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    சென்னை:

    புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றான, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது.

    தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று வழங்கி உள்ளது.

    சுமார் 600 பக்கங்கள் கொண்ட பரிந்துரைகளை மாநில கல்விக்கொள்கை உருவாக்க குழு சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில...

    * 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

    * தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ்1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும்.

    * பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும்.

    * நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கூடாது.

    • தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
    • உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாடு மாநிலத்திற்காக கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர், ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் யூனி செப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 பேர் இதில் இடம் பெற்றிருந்தனர்.

    அனைவருக்கும் உள்ள கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கையை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கினார்கள்.

    600 பக்கங்கள் கொண்டதாக அதன் அறிக்கை உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-

    3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைக்க கூடாது. பிளஸ்-1 பொதுத் தேர்வை தொடர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றபோது படிப்பதில் இருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற தேவையில்லை.

    முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும், 2-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், 3-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனை மாநில கல்விக் கொள்கை நிராகரிக்கிறது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என உள்ளது.

    தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.

    தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10-ம் வகுப்பில் வாரிய தேர்வுகளை எடுக்கும் வரை, பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.

    முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்க கூடாது.

    கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

    மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு தடகள நிகழ்வுகளில் கலந்து கொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

    உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.

    நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

    மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.

    அனைத்து தாய்-சேய் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கிறது.

    ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

    போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர் ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக்குழு அமைக்க வேண்டும்.

    இரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

    ×