search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvsIND"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பெர்க்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர், சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். ஸ்ரேயஸ் 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஜோகனஸ்பெர்க்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
    • முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்கில் நாளை தொடங்குகிறது

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது

    இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து தீபக் சாஹர் திடீரென விலகியுள்ளார். சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இதேபோல், டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட

    மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

    ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது.

    கெபேஹா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.


     

    சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். 

    தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. 

    • முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    • 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    உடல்நிலை சரியில்லாததால் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் ஆடவில்லை.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ருத்ராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா

    ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

    டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

    ×