search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Job"

    • விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
    • மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

    அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

    இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.

    பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ரெயில்வே பணிகளில் நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த மணவாளன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரெயில்வே பாதையில் கடந்த 8-ந் தேதி, 2 ரெயில்கள் எதிரெதிரே இயக்கப்பட்டு, பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. மொழிப்பிரச்சினை காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிகழ்வு ரெயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

    பொதுவாக ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளிலேயே நடைபெறுகிறது. எனவே பணிக்கு தேர்வாகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் ரெயில்வே ஊழியர்கள் பலர் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர்.

    தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உள்பட அந்தந்த பிராந்திய மொழி பேசும் மாணவர்கள் ரெயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை.

    தமிழகத்தில் ரெயில்வேயின் முக்கிய பொறுப்புகளில் இருப்போருக்கு பெரும்பாலும் தமிழ் தெரிவதில்லை. கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரெயில் பாதையில் மேற்கண்ட நிகழ்வு நடைபெற்றபோது, தொலைத்தொடர்பிலும் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்டுகள் பணியாற்றும் நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை.

    எனவே தமிழ் மொழி தெரிந்தவர்களை தமிழக ரெயில்வே பணிகளில் அமர்த்த வலியுறுத்தி ரெயில்வே யூனியன்கள் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

    எனவே, ரெயில்வே துறை பணிகளில் குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், கார்ட்ஸ், பாய்ண்ட்ஸ்மேன் உள்ளிட்ட முக்கிய பணிகளில் தமிழகத்தில் தமிழ்மொழி தெரியாத நபர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் ரெயில்வே துறையில் 2.45 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 1 லட்சம் பேருக்கு பணிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    தெற்கு ரெயில்வேயில் இதுவரை 5 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் ஓய்வு பெற்றவர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ரெயில்வேயில் பணியாற்றி 60 வயதை கடந்த நிலையில் உள்ளவர்களுக்கு பணி வழங்கும்போது ரெயில்வேயில் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என ரெயில்வே ஊழியர்களே கருத்து தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக ரெயில்வேயில் பணிபுரிவதற்கு உடல் வலிமை, மன வலிமை ஆகியவை அவசியமான ஒன்று.

    எனவே ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கும், வேலை கிடைக்காமல் காத்திருக்கின்ற இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    ரெயில்வேயில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதையும், ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GKVasan
    ×