என் மலர்
நீங்கள் தேடியது "mind control"
- தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
- ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே. தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால் அழகான, ஒளிரும், மென்மையான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நம் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்!
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நன்கு உதவும். தேங்காய் எண்ணெய், சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, ஆரோக்கியமான சரும அமைப்பை மேம்படுத்துகிறது. எண்ணெயை லேசாக சூடாக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். எண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜும் கொடுக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தினருக்கு நல்ல வித்தியாசம் தெரியும். முகம் மென்மையாக இருக்கும்.
கற்றாழை...
பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை, முகப்பரு மற்றும் சுருக்கத்தை குறைக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்கி, எப்போதும் முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் போதும். 3 நாட்களிலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.

அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே!
பால்...
பச்சைப்பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். அப்போது முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமம் கிடைக்கும்.
தேன்!
முகப்பரு, தழும்பு, முக வடுக்கள் உள்ளிட்டவற்றை தேன் குறைக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். இளமையான தோற்றத்தை தக்கவைக்கும். தேனை அப்படியே எடுத்து கையால் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும்.
- தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
- நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும்.
தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.
நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும்.
இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்துக் கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் எல்லாம் மறந்து போகும்.
இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளியில் உள்ள சத்தங்கள் இடையூறு செய்யும்.
மனதில் இருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

மனதை கட்டுப்படுத்தாமல் எப்படி தியானம் செய்வது...?
முதுகுத்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு இருக்க வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்னென்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள்.
மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும்.
இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் மனதில் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.
தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.






