search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Rail Work"

    • இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.
    • பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 116. 1 கி.மீ. நீளத்திற்கு 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று வழித் தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரே தடவையில் தனியாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய பணியாக உள்ளது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. தூரம் 3-வது வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர், அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசை வாக்கம் வழியாக செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பெரம்பூர் ரெயில் தண்டவாளத்திற்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைகிறது. 4 வழி ரெயில் பாதைக்கு அடியில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    கடந்த வாரம் தண்டவாளத்தை கடந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்தது. அதற்காக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 6 நாட்கள் வேகம் குறைக்கப்பட்டு அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்து சென்றன.

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கல்வராயன் என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயனாவரத்தில் இருந்து பணியை தொடங்கியது. பெரம்பூர் வரையிலான 837 மீட்டர் வரை சுரங்கத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பூரில் ரெயில் தண்டவாளத்தை சுரங்கம் தோண்டும் எந்திரம் கடக்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மிக குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அனைத்தும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
    • தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    கோவை,

    கோவையில், 'மெட்ரோ' ெரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

    தொடக்கத்தில் உக்கடம் - கணியூர், உக்கடம்- பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி, தடாகம் ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை, காருண்யா நகர் முதல் அன்னூர் கணேசபுரம் என, நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

    முதல்கட்ட மாக, வெள்ளலூர் பஸ் முனையத்தில் இருந்து, உக்கடம் - அவினாசிரோடு வழியாக, நீலாம் பூரில் உள்ள பி.எஸ்.ஜி., பவுண்டரி (பி.எஸ்.ஜி., ஐடெக்) வரை 31.2 கி.மீ. தூரத்துக்கு முதல் வழித்தடம்; கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சத்தி ரோடு வழியாக வலியாம்பா ளையம் பிரிவு வரை, 14.1 கி.மீ., தூரத்துக்கு இரண்டாவது வழித்தடம் என இரு வழித்தடங்களில் ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை 45.3கி.மீ. தூரத்துக்கு செயல்படு த்தலாம் என தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை முன் மொழி ந்திருக்கிறது.

    இந்த நிலையில் கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மெட்ரோ ெரயில் திட்டம் தொடர்பாக, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனத்திடம் தகவல் பெற்றிருக்கிறார்.

    அதில், 'மெட்ரோ திட்டம் தொடர்பாக, 'சிஸ்த்ரா' மற்றும் 'ரைட்ஸ்' என்கிற ஆலோசனை நிறுவனங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றன. 'பேஸ்-1 திட்ட அறிக்கை தமிழக அரசின் தீவிர பரி சீலனையில் இருக்கிறது. தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப் பப்படும்' என தெரிவித்துள்ளது.

    அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுவதால், மெட்ரோ ெரயில் திட்டத்துக்கு பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு கோவை நகரத்துக்கு முன்மொழியப் படும் அதிவிரைவு போக்குவரத்து திட்டம் தமிழக அர சின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    • குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.
    • மெட்ரோ ரெயில் கட்டுமான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர்.

    சென்னை:

    கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை தற்போது மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. இதில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் கட்டுமான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர்.

    அதிக பாரம் கொண்ட இரும்பு தடுப்புகளை சிறிய கம்பிகளில் நிறுத்தி வைப்பதால் இத்தகையை விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.
    • 5 வருடம் அனுபவம் உள்ளதுபோல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து தெரியவந்தது.

    போரூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணி 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது.

    கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேருடன் ஆலந்தூர் நோக்கி மவுண்ட-பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

    ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரெயில் பணிக்காக இரும்பு கம்பிகளை "டிரெய்லர் லாரியில்" ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத கிரேனில் இருந்து இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது. இதில் மாநகர பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

    இது தொடர்பாக ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.

    அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×