search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மெட்ரோ ரெயில் பணி
    X

    கோவையில் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மெட்ரோ ரெயில் பணி

    • நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
    • தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    கோவை,

    கோவையில், 'மெட்ரோ' ெரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

    தொடக்கத்தில் உக்கடம் - கணியூர், உக்கடம்- பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி, தடாகம் ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை, காருண்யா நகர் முதல் அன்னூர் கணேசபுரம் என, நான்கு வழித்தடங்களில் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

    முதல்கட்ட மாக, வெள்ளலூர் பஸ் முனையத்தில் இருந்து, உக்கடம் - அவினாசிரோடு வழியாக, நீலாம் பூரில் உள்ள பி.எஸ்.ஜி., பவுண்டரி (பி.எஸ்.ஜி., ஐடெக்) வரை 31.2 கி.மீ. தூரத்துக்கு முதல் வழித்தடம்; கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சத்தி ரோடு வழியாக வலியாம்பா ளையம் பிரிவு வரை, 14.1 கி.மீ., தூரத்துக்கு இரண்டாவது வழித்தடம் என இரு வழித்தடங்களில் ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை 45.3கி.மீ. தூரத்துக்கு செயல்படு த்தலாம் என தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை முன் மொழி ந்திருக்கிறது.

    இந்த நிலையில் கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மெட்ரோ ெரயில் திட்டம் தொடர்பாக, சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனத்திடம் தகவல் பெற்றிருக்கிறார்.

    அதில், 'மெட்ரோ திட்டம் தொடர்பாக, 'சிஸ்த்ரா' மற்றும் 'ரைட்ஸ்' என்கிற ஆலோசனை நிறுவனங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றன. 'பேஸ்-1 திட்ட அறிக்கை தமிழக அரசின் தீவிர பரி சீலனையில் இருக்கிறது. தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப் பப்படும்' என தெரிவித்துள்ளது.

    அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுவதால், மெட்ரோ ெரயில் திட்டத்துக்கு பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு கோவை நகரத்துக்கு முன்மொழியப் படும் அதிவிரைவு போக்குவரத்து திட்டம் தமிழக அர சின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது என சென்னை மெட்ரோ ெரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    Next Story
    ×