search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet facility"

    • மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், இரண்டு இணைய இணைப்பு திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.50 கோடியை திரிபுராவிற்கு அனுமதித்துள்ளது.
    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.

    திரிபுரா துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா நேற்று திரிபுராவில் உள்ள 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்தார்.

    இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் 129 தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்களை நிறுவ உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 583 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தகுதியை ஆய்வு செய்வதற்காக மறு ஆய்வு செய்யப்படுகிறது.

    மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், இரண்டு இணைய இணைப்பு திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.50 கோடியை திரிபுராவிற்கு அனுமதித்துள்ளது.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு ஃபைபர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் பொது வைஃபை, ஹாட்ஸ்பாட் வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
    • தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை கையாளும் வகையில் இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க நிர்பயா நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் முறையிடல் வலைதளமானwww.cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி நிதி மோடிகள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய கட்டணமில்லா உதவி அழைப்பு எண்.1930 செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

    ×