என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local bodies"

    • கல்வி நிதியை பெறாமல் தி.மு.க. அரசு அரசியல் செய்கிறது.
    • நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கும், 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இணைப்புக் கட்டணம் மற்றும் ஒரு முறைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    இதற்குத் தேவையான ரூ.189.11 கோடியை பள்ளிக் கல்வித்துறை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ரூ.5.49 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மீதமுள்ள ரூ.183.62 கோடியை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதியும், வருவாயும் இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

    இந்த நிலையில் இணைய வசதிக் கட்டணத்தையும் உள்ளாட்சி அமைப்புகளே ஏற்க வேண்டும் என்றால், அதை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்கமுடியாது. அதனால், ஊரக உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து விட்டதையடுத்து அந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது.

    அத்தகைய சூழலில் இணையவசதிக் கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது.

    தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயம் அல்ல.

    உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும் பெறுவதை விட, இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

    ஒருங்கிணைந்தக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து பெறாதது தமிழக அரசின் தோல்வி. அதற்காக உள்ளாட்சி அமைப்புகளைத் தண்டிப் பது எந்த வகையிலும் நியாயமல்ல.

    எனவே, அரசு பள்ளிகளுக்கான இணைய வசதிக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுகளில் வாக்குபதிவு செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒருமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கடலூர் ஒன்றியத்தில் கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலத்தில் 6-வது வார்டுக்கும், மருதாடு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மாலை 6 மணிவரை நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள், வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கிடையே இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×